News April 22, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி & திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்காசி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது.
Similar News
News November 5, 2025
நவம்பர் 5: வரலாற்றில் இன்று

*1870–சுதந்திர போராட்ட தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள். *1888-தமிழ் இலக்கிய வரலாற்றை முதலில் எழுதிய அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்தநாள். *1930–மருத்துவர் பூ.பழனியப்பன் பிறந்தநாள். *1952–எழுத்தாளர் வந்தனா சிவா பிறந்தநாள். *2013–செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. *2007–ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியீடு.
News November 5, 2025
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு: OPS

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்வதாக OPS விமர்சித்துள்ளார். கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், திமுக அரசு காவல்துறையை செயலிழக்க வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 5, 2025
சர்ச்சை சமிக்ஞை.. பாக்.வீரருக்கு ஐசிசி தடை

ஆசிய கோப்பையில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதமும், 2 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சர்ச்சை சமிக்ஞை காட்டிய ஹாரிஸ் ராஃப்-க்கு மொத்தமாக 4 தகுதி இழப்பு புள்ளிகளுடன் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


