News December 19, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகராமல் வடக்கு நோக்கி செல்வதால் மழை படிப்படியாக குறையும் என்று தெரிகிறது.
Similar News
News September 17, 2025
IND-ஐ எதிர்கொள்ளும் டெஸ்ட் படையை அறிவித்த WI

IND vs WI மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் வரும் அக்., 2 முதல் 14-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான, 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆஸி., உடனான சமீபத்திய தோல்வியை அடுத்து, அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபால், அலிக் அதனாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். சுழல் பந்து வீச்சாளரான கேரி பியர்ரி புதிதாக அறிமுகமாக உள்ளார்.
News September 17, 2025
ராகுலை புகழ்ந்த EX பாக்., வீரர்: பாஜக விமர்சனம்

ராகுல் காந்தியை EX பாக்., கிரிக்கெட் வீரர் <<17729515>>அஃப்ரிடி<<>> பாராட்டியதை பாஜக விமர்சித்துள்ளது. பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாக ராகுல் மாறிவிட்டதாகவும், அந்த மக்கள் அவரை தலைவராக ஏற்க கூட தயக்கம் காட்ட மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சாடியுள்ளார். இதற்கு, அஃப்ரிடியுடன் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காங்., பதிலடி கொடுத்துள்ளது.
News September 17, 2025
பெரியார் பொன்மொழிகள்

*மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. *பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு. *தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும். *ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அதேபோல் மற்றவர்களிடமும் அவன் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். *கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.