News April 6, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
இதுபோன்ற பேச்சை பொன்முடி தவிர்த்திருக்கலாம்: HC

சைவ, வைணவ மதங்களை ஒப்பிட்டு, பெண்கள் பற்றி பொன்முடி அவதூறாக பேசியதை சென்னை HC தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தற்போது இந்த வழக்கை முடித்துவைத்துள்ள HC, பொறுப்பான பதவியிலிருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புகாரளித்தவர்களிடம் போலீஸார் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக தனிநபர் புகாரளிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
News September 16, 2025
ஜோடியாக சுற்ற 8 இடங்கள்

இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஜோடியாக செல்ல சில ஊர்கள் உள்ளன. அதில் சிறந்த 8 இடங்களை மேலே போட்டோக்களாக வழங்கி இருக்கிறோம். அனைத்தையும் பாருங்க. உங்க பேவரைட் சுற்றுலா ஸ்பாட் எது? நீங்கள் உங்க ஜோடியுடன் செல்ல விரும்பும் ஊர் எது? கமெண்ட்ல சொல்லுங்க. இதை உங்கள் ஜோடிக்கு share செய்து எந்த ஊருக்கு போகலாம்னு கேளுங்க?
News September 16, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு.. HAPPY NEWS

பள்ளிக்கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், TET தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. TET தேர்வு எழுத தங்கள் துறையிடமிருந்து தடையில்லா சான்று (NOC) பெற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதன்மை கல்வி அலுவலகங்களில் NOC-க்காக அலையும் வேலை மிச்சம் என ஆசிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். SHARE IT.