News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், தேனி, தென்காசி, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை & குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News December 31, 2025

நாகை மக்களே.. நாளை இதை செய்ய மறக்காதீங்க!

image

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

News December 31, 2025

இன்றிரவு இந்த விஷயத்தில் கவனமா இருங்க!

image

இன்று இரவு இளைஞர்களை கையிலேயே பிடிக்க முடியாது எனலாம். புது வருடப்பிறப்பை முன்னிட்டு, கூட்டம் கூட்டமாக வண்டியில் ரவுண்ட்ஸ் அடிப்பதும், ஆடிப்பாடி கொண்டாடுவதும் என ஆனந்தமாக இருப்பார்கள், தவறில்லை. ஆனால், சந்தோஷம் என்ற பெயரில் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி விபத்துக்களில் சிக்குவது வேண்டாமே. நன்றாக மனதில் வைத்து கொள்ளுங்கள் எப்போதும் உங்களுக்காக வீட்டில் ஒரு உயிர் காத்துக் கொண்டிருக்கும். SHARE IT.

News December 31, 2025

சொத்துப் பத்திரம் தொலைந்துவிட்டதா?

image

வீடு (அ) நிலத்தின் பத்திரம் ஒருவேளை தொலைந்துவிட்டால் முதலில் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்துவிட்டு, பத்திரிகையில் விளம்பரமும் கொடுக்க வேண்டும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் போலீசிடம் NOT TRACEBLE என்ற சான்றை பெற்று நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று பெற வேண்டும். பின்னர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!