News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், தேனி, தென்காசி, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை & குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News October 19, 2025
கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது பயமாக உள்ளது: SKY

டி20 கேப்டனாக கில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அது குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது என்பது அனைவருக்குமே பயத்தை கொடுக்கு எனவும், ஆனால் அந்த பயம் தான், சிறப்பாக விளையாட தூண்டும் உந்துசக்தியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்தால் நடக்க வேண்டியது நடக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கட்!

அன்பையும், பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோருக்கு வழங்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
News October 19, 2025
ஆப்கனிடம் இருந்து BCCI கற்று கொள்ள வேண்டும்: சிவசேனா

பாகிஸ்தானுடன் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறுவதாக <<18038009>>ஆப்கன்<<>> அறிவித்தது. இதை சுட்டிக்காட்டி, ஆப்கனிடம் இருந்து BCCI-யும், மத்திய அரசும் கற்று கொள்ள வேண்டும் என வேண்டும் என சிவசேனா (UBT) தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டை விட நாட்டு நலனுக்கு ஆப்கன் முக்கியத்துவம் கொடுத்ததையும் பாராட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆசிய கோப்பையில் PAK உடன் இந்தியா விளையாடியது.