News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

Similar News

News February 25, 2026

நல்லகண்ணு மறைந்தார்.. மருத்துவமனை அறிக்கை

image

மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், அனைத்து உடலுறுப்புகளும் செயல் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.55 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

News February 25, 2026

வெரைட்டி வெரைட்டியா வடை சுடும் EPS: CM ஸ்டாலின்

image

₹15 லட்சம் தருவேன் என ஒரு காலத்தில் PM மோடி வடை சுட்டதை போல, தற்போது EPS வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார் என அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மீனவர்கள் கைதுக்கு எப்போது விடிவுகாலம் வரும், வெளியுறவுத் துறை யார் கண்ட்ரோலில் உள்ளது என கேட்ட அவர், PM மோடி இதற்கெல்லாம் பதில் சொல்வாரா என கேட்டுள்ளார். மேலும், பாஜகவுக்கு கிடைத்த சரியான ஆள் தான் EPS எனவும் பேசியுள்ளார்.

News February 25, 2026

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த நல்லகண்ணு!

image

சுதந்திர போராட்டத்தோடு ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமைக்கான போராட்டங்களை தமிழகம் முழுவதும் முன்னெடுத்தவர். நாங்குநேரியில் கோயில் நுழைவு போராட்டத்தை நல்லகண்ணு முன்னின்று நடத்தினார். குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறான கடனா ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். TN அரசு கட்டிய அணையால் இன்று அப்பகுதி விவசாயத்தில் செழித்து காணப்படுகிறது.

error: Content is protected !!