News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News January 29, 2026
வேலூர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். வேலூர் மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் நிலுவை பட்டியலை TN அரசு தயார் செய்து வருகிறதாம். மேலும், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் நகைக்கடன் குறித்த தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 29, 2026
₹1Cr கேட்டு விஜய்க்கு மானநஷ்ட நோட்டீஸ்

தவெகவில் இணைந்ததாகக் கூறி, தவறான தகவல் வெளியிடப்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர், விஜய் ஆகியோருக்கு பிரபல தொழிலதிபர் கண்ணன் மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது மகன் மட்டுமே தவெகவில் சேர்ந்ததாக கூறியுள்ள அவர், தவறான செய்தி வெளியிட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ள அவர், கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.


