News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

Similar News

News February 25, 2026

BREAKING: ₹2,000… முதல்வர் புதிய அறிவிப்பு

image

குமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த CM ஸ்டாலின், 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடலில் காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் கிடைக்கும் வரை மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மீனவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் கல்வி, திருமண உதவித் தொகைகள் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

35 கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப்

image

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தான் தலையிடாவிட்டால், பாகிஸ்தானில் 35 கோடி மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஷெபாஸ் ஷெரிப் தன்னிடம் கூறியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். USA அதிபராக தான் பதவியேற்று ஓராண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், இந்தியா -பாக்., போர், அது அணு ஆயுத போராக மாறியிருக்கும் என்றார். மேலும், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பேசியுள்ளார்.

News February 25, 2026

ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவின் முடிவு இதுதான்

image

ரஷ்யா-உக்ரைன் போர் 4 ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில், போர் நிறுத்தத்தை அறிவிக்கக்கோரி ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில், இந்தியா, USA, சீனா உள்ளிட்ட 51 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. முன்னதாக, இவ்விவகாரத்தில் அமைதியை மட்டுமே இந்தியா விரும்புவதாக தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!