News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News February 21, 2026
ELECTION FLASH: நயினார் – ஜான் பாண்டியன் திடீர் சந்திப்பு

NDA கூட்டணியில் இணைந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், 5 சீட்டுகள் கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், EPS-ஐ சந்தித்து பேசியிருந்த நிலையில், நேற்று இரவு, நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியுள்ளார். தென்காசி தொகுதியில் ஏற்கெனவே ஜான் பாண்டியன் தீவிரமாக பிரசாரம் செய்து வருவது கவனிக்கத்தக்கது.
News February 21, 2026
விஜய் CM ஆனதும் சாதிவாரி கணக்கெடுப்பு: ஆதவ்

உண்மை நிலவரம் தெரிந்துவிடும் என்பதற்காகவே தமிழகத்தில் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் காங்., அரசு இக்கணக்கெடுப்பை நடத்தும்போது, இங்குள்ள காங்., தலைவர்கள் அது பற்றி பேசவே மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், விஜய் முதலமைச்சரானதும் முதல் வேலையே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதுதான் என்றும் ஆதவ் தெரிவித்தார்.
News February 21, 2026
MGR உருண்டு உருண்டு அழுதிருப்பார்: உதயநிதி

மோடிக்கு ஏற்ற முரட்டு அடிமையாக EPS மாறிவிட்டார் என்று DCM உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு MGR-ன் படம் பார்த்த EPS கண்கலங்கிய காட்சிகள் வைரலானது. இதனைக் குறிப்பிட்ட உதயநிதி, இன்று MGR உயிருடன் இருந்திருந்தால் EPS-ஐ பார்த்து உருண்டு உருண்டு அழுதிருப்பார் என கூறினார். நான் தொடங்கிய கட்சியை இப்படி செய்துவிட்டாயே என்று MGR வேதனைப்பட்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.


