News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

Similar News

News February 24, 2026

மாணவர்களிடையே சாதிய வெறிக்கு யார் பொறுப்பு? EPS

image

தூத்துக்குடி, முதலூரில் 11-ம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் சாதிவெறி கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடந்து 4 நாள்களாகியும் இதுவரை வழக்கு பதியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களிடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

News February 24, 2026

அதிமுகவில் இணைந்த ஆதரவாளர்கள்.. OPS அதிர்ச்சி

image

OPS-ன் கோட்டையான தேனியில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 400 பேர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளரான செயற்கை சந்திரன் தலைமையில் இணைந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மகளிரணி, மாணவரணி, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News February 24, 2026

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைய இப்படி விளக்கேற்றுங்கள்!

image

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.

error: Content is protected !!