News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News January 24, 2026
மக்களுடனே தவெக கூட்டணி: அருண்ராஜ்

தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், தவெக கூட்டணிக்கு இதுவரை எந்த முக்கிய கட்சிகளும் வரவில்லை. இந்நிலையில், இன்னும் கூட்டணி பற்றி முடிவெடுக்காமல் இருக்கும் OPS-ம், தேமுதிகவும் கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறதா என அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தவெக மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றிபெறும் என்றார். இதன்மூலம் தவெக தேர்தலை தனித்தே சந்திக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.
News January 24, 2026
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுவா?

வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குநர் பிராங்கிளின் ஜேகப் கதையில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனியின் Writer படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜேகப். வழக்கமாக ஜாலியான ஸ்கிரிப்டுகளில் நடிக்கும் பிரதீப், சீரியஸான கதைகளை உருவாக்கும் இயக்குநரோடு கமிட்டாகி இருப்பதாக கூறப்படும் தகவல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
News January 24, 2026
பாதாளச் சாக்கடையில் கொசுவலை: மேயர் விளக்கம்

சென்னையின் சில இடங்களில் பாதாளச் சாக்கடை மூடியின் அடிப்பகுதியில் <<18935030>>கொசுவலை<<>> போர்த்தியது விமர்சனத்திற்கு உள்ளானது. இது கொசுக்களுக்காக வைக்கப்பட்டது அல்ல என மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். ஒரு கவுன்சிலரின் வேண்டுகோளின்படி வைக்கப்பட்டது என்றும், மாநகராட்சியின் முன்னெடுப்பு அல்ல எனவும் அவர் கூறினார். இதை இவ்வளவு சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரியா தெரிவித்தார்.


