News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

Similar News

News December 12, 2025

தாயின் அன்புக்கு ஈடுண்டோ.. ஆணாகவே மாறிய தாய்!

image

தூத்துக்குடியை சேர்ந்த பேச்சியம்மாளுக்கு குழந்தை பிறந்த 15-வது நாளில் கணவர் இறக்கிறார். பாதுகாப்பாக தனது மகளை வளர்க்க, வெளியூருக்கு கிளம்பிய அவர், முத்துவாக அவதாரம் எடுத்தார். தந்தையாகவும், தாயாகவும் இருந்து தனது மகளை பேணி காத்து வளர்த்து, திருமணமும் செய்து வைத்துள்ளார். 30 ஆண்டுகள் மகளுக்காக தன் வாழ்வை பேச்சியம்மாள், இன்றும் முத்துவாக வாழ்கிறார். குழந்தைக்காக தாய் எதுவும் செய்வாள் அல்லவா!

News December 12, 2025

காற்று மாசுக்கு இணைந்து தீர்வு காண வேண்டும்: ராகுல்

image

டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிலவி வரும் காற்று மாசை தடுக்க, விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டாமல், ஒன்றாக இணைந்து தீர்வை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். சரியான திட்டம் என்றால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

News December 12, 2025

BREAKING: நடிகை ராஜேஸ்வரி காலமானார்

image

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி(39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில், 5 நாள்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல்கள் மூலம் ராஜேஸ்வரி தமிழ் மக்களின் மனம் கவர்ந்தார். தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது.

error: Content is protected !!