News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News February 28, 2026
தேர்தலில் இருந்து விலகுகிறேன்: ராதிகா

பாஜகவில் இணைந்து தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வந்த நடிகை ராதிகா, 2026 தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். ‘தாய் கிழவி’ படத்தை மதுரையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டுகளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’தொழிலில் முதலில் கவனம் செலுத்திவிட்டு பின்னர், அரசியலை பார்ப்போம்’ எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியிருந்தார்.
News February 28, 2026
3,979 பணியிடங்கள்.. உடனே APPLY பண்ணுங்க

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட்டில் 3,979 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ITI பிரிவு பணிக்கு மாதம் ₹8,200, ITI அல்லாத பிரிவுகளுக்கு ₹9,600 சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மார்ச்.3-க்குள் இந்த <
News February 28, 2026
ஊசி நூலில் உலகை அழகாக்குபவர்கள் தினம்!

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். அரை மனிதனை நேர்த்தியாக நெய்த உடையின் மூலம் முழு மனிதனாக்குபவர்கள் தையல்காரர்கள். சமூகத்தின் அவர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நவீன தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த வில்லியம் ஏலியஸ் ஹோவின் பிறந்தநாளான பிப். 28-ம் தேதி உலக தையல்காரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஃபேஷன் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாரம்பரியத்தையும் பாதுகாப்புக்கும் அவர்களின் பங்களிப்பை போற்றுவோம்!


