News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News February 27, 2026
6 மணிநேரம் தான்.. வாட்ஸ் ஆப்பில் புதிய மாற்றம்

இந்தியாவில் வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். WhatsApp Web பயன்படுத்தும் போது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை அது தானாகவே Logout ஆகிவிடும். மீண்டும் பயன்படுத்துவதற்கு QR CODE மூலமாக Login செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி, இத்திட்டம் மார்ச் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
OPS அமைதிப்படை சத்யராஜ் போன்றவர்: RB உதயக்குமார்

திமுகவில் OPS-க்கு கிடைக்கும் பதவி, துரோகத்திற்காக கிடைத்த பரிசு என RB உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுகவின் பொய் வழக்கில்தான் ஜெயலலிதாவின் உயிர்போனதாக தெரிவித்த அவர், அந்த சமயத்தில், CM பதவிக்காக திமுகவின் உளவாளியாக OPS இருந்திருப்பாரோ என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், அமைதிப்படை சத்யராஜ் போல் OPS எங்கே யாருக்கு ஆப்பு வைப்பார் என யாருக்கும் தெரியாது எனவும் சாடியுள்ளார்.
News February 27, 2026
நகைக் கடன்.. மகிழ்ச்சியான செய்தி

நகைக் கடன் தேவைப்படுபவர்களுக்கு இந்தியன் வங்கி மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்குகிறது. இந்தியன் வங்கி மட்டுமே நகையின் மதிப்பில் 85% அளவுக்கு கடன் வழங்கும் பொதுத்துறை வங்கியாகும். இதனால், அதிக மக்கள் அந்த வங்கியின் கிளைகளில் நகைக் கடன் பெற்று வருகின்றனர். மேலும், விவசாய நகைக் கடன்களுக்கு 7% மட்டுமே வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் இந்தியன் வங்கியில் நகைக் கடன் வாங்கி உள்ளீர்கள்?


