News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News January 30, 2026
செங்கல்பட்டு மாணவர்கள் சாதனை

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏர்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று சாதனை படைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஏர்கன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் பி.கிருஷ்ணகுமார் தலைமையில் கலந்து கொண்ட வீரர்களில் 12 பேர் தங்கமும், 4 பேர் வெள்ளியும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
News January 30, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹4,800 குறைந்தது

தங்கம் விலை <<18989965>>நேற்று<<>> வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், இன்று (ஜன.30) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹600 குறைந்து ₹16,200-க்கும், சவரனுக்கு ₹4,800 குறைந்து ₹1,29,600-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.
News January 30, 2026
பிப்.1 அன்று ஏன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது?

இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகும் இதுவே நடைமுறையில் இருந்தது. ஆனால், 2017-ல் அப்போதைய FM அருண் ஜெட்லி, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். ஏப்ரலில் தொடங்கும் நிதியாண்டுக்கு தேவையான திட்டமிடல்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.


