News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News February 3, 2026
தங்கத்திற்கு சலுகை.. அரசு புதிய அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் மத்திய நிதியமைச்சகம் புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, ஓராண்டுக்கு மேல் வெளிநாடுகளில் வசிக்கும் பெண்கள் 40 கிராம், மற்றவர்கள் 20 கிராம் வரை தங்க நகைகளை வரியின்றி கொண்டு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ₹75,000 வரையிலான நகைகளுக்கே வரிச் சலுகை வழங்கப்பட்டிருந்தது. புதிய விதிகள் நேற்று(பிப்.2) முதல் அமலாகியுள்ளன.
News February 3, 2026
இசையமைப்பாளர் வெங்கடேஷ் காலமானார்.. குவியும் இரங்கல்

பழம்பெரும் இசையமைப்பாளர் <<19038748>>SP வெங்கடேஷ்(70)<<>>, சென்னையில் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து SM-ல் உருக்கமாக பதிவிட்ட பாடகி சுஜாதா மோகன், இசை உலகிற்கு பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மெல்லிசைகள் அழியாமல் நிலைத்திருக்கும் எனவும், SP வெங்கடேஷ் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். SP வெங்கடேஷின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.
News February 3, 2026
விலக்கி வைக்கப்பட்டிருக்கும் அண்ணாமலை: எஸ்.வி.சேகர்

அண்ணாமலை விலகவில்லை, விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். எப்போதும் பொய்யாக சொல்லும் அண்ணாமலை சுயநலக்காரர் என்றும், அவர் பணியாற்றினால் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெல்ல முடியாது என்பதை அறிந்து, டெல்லி தலைமை அறிவுறுத்தலின்பேரில் விலகி இருக்கக்கூடும் எனவும் கூறினார். மேலும், வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் தோல்வி அடைவார் எனவும் விமர்சித்துள்ளார்.


