News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News April 11, 2025
BREAKING: டிடிவி தினகரன் ஹாஸ்பிடலில் அனுமதி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News April 11, 2025
இடி, மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

மழைக்காலங்களில் இடி, மின்னல் ஏற்படும்போது வீட்டிற்குள் இருப்பதே பாதுகாப்பானது. அருகில் கட்டடம் ஏதும் இல்லாவிட்டால், கார், வேன் அல்லது பஸ்ஸூக்குள் சென்றுவிட வேண்டும். வெட்டவெளியில் நிற்கக்கூடாது. இடி, மின்னல் ஓய்ந்து அரை மணி நேரம் வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அருகிலும் செல்லக் கூடாது. எக்காரணம் கொண்டும் மரத்தடியில் தஞ்சமடையக்கூடாது. SHARE IT!
News April 11, 2025
ருதுராஜ்க்கு பதிலாக இன்று யார் விளையாடலாம்?

இந்த ஆண்டு IPL தொடரில், CSK அணி சரியான பேட்டிங் ஆர்டரை செலக்ட் பண்ண முடியாமல், தொடர்ந்து தடுமாறி வருகிறது. தற்போது ருதுராஜும் இல்லாத சூழலில், அவருக்கு பதிலாக 2வது விக்கெட்டிற்கு யாரை களமிறக்கும் CSK என்பதே பெரிய கேள்வி. ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டும் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி ஆகியோர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்று பிளேயிங் XIல் யார் யார் இருப்பாங்க?