News March 26, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News August 13, 2025

இந்தியாவை எச்சரித்த பாக்., PM

image

பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நீரில் ஒரு துளியைக் கூட இந்தியாவால் பறிக்க முடியாது என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை நிறுத்தி வைத்து மிரட்டினால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. பாக்., Ex அமைச்சர், ராணுவ தளபதி மிரட்டலை அடுத்து பிரதமரும் எச்சரித்துள்ளார்.

News August 13, 2025

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

image

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஆனால், புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு சற்று வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

₹100 கோடி வசூல்.. சம்பளத்தை உயர்த்திய VJS..

image

விஜய்சேதுபதி – நித்யாமேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படம் உலகம் முழுவதும் இதுவரை ₹93 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ₹100 கோடி வசூலை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை அடுத்து விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் தங்களது சம்பளத்தை உயர்த்திவிட்டனராம். இதனால் அவர்கள் இருவரும் இணையும் அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் தயக்கம் காட்டுகிறாராம்.

error: Content is protected !!