News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 24, 2026
US வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்க: ராகுல் காந்தி

அமெரிக்கா <<19196080>>SC தீர்ப்பை சுட்டிக்காட்டி<<>>, US உடனான வர்த்தக ஒப்பந்தத்தை PM மோடி ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதை PM செய்ய மாட்டார் என தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் இதயத்தில் பாய்ந்த அம்பு எனவும் விமர்சித்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் & அதானியை காப்பாற்றுவதற்காக டிரம்ப் கொடுக்கும் அழுத்தத்தால் மோடி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் சாடியுள்ளார்.
News February 24, 2026
ஜெயலலிதா மரணம்… பரபரப்பு தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல் முறையாக சசிகலா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா உடல்நிலை தேறி வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என நினைத்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக சசிகலா கூறியுள்ளார். ஆனால், தான் கொன்றுவிட்டதாக எதிரிகள் வெளியில் கதைக்கட்டி விட்டனர் என தெரிவித்துள்ளார். அரசியலுக்காக இது செய்யப்பட்டதாகவும், இதை யார் நம்புவார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 24, 2026
UPSC தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு!

UPSC தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு பிப்.27 மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. IAS, IPS உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸில் <<19180761>>இந்தாண்டு 933 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <<>>இதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.24-ம் தேதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இணையதள தொழில்நுட்ப கோளாறால் விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.


