News March 26, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News February 11, 2026

இரும்புச் சத்தை அள்ளித் தரும் அதிசய விதை!

image

உங்கள் ரத்தத்தில் இரும்புச் சத்தை பன்மடங்கு அதிகரிக்கும் ஒரு அதிசய உணவுப்பொருள் தான் ஹலீம் சீட்ஸ். 100g ஹலீம் விதைகளில் 100mg இரும்புச் சத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு ஸ்பூன் விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன்மீது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, இரும்புச் சத்தை உடல் உறிஞ்ச உதவும்.

News February 11, 2026

நகைக் கடன்.. மக்களுக்கு ஷாக்

image

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?

News February 11, 2026

ஜெயலலிதா சொன்னதால் ’எடப்பாடி’ பெயர் வந்தது: EPS

image

ஜெயலலிதா எப்போதுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என எண்ணக்கூடியவர் என அவர் மீதான நினைவலைகளை <<19113803>>EPS பகிர்ந்துள்ளார்<<>>. தனியார் ஊடகத்தில் பேசிய அவர், தான் கட்சியில் சிறப்பாக செயல்பட்டதால் அமைப்பு செயலாளர், அமைச்சர் என பல பதவிகளை ஜெ., வழங்கினார் என்று தெரிவித்துள்ளார். பெயர் முன் ஊரின் பெயரை அடையாளமாக வைக்கும்படி ஜெயலலிதா சொன்னதாலே தனது பெயரை ’எடப்பாடி பழனிசாமி’ என மாற்றிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!