News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News December 18, 2025
தவெக ஒரு கொலைகார சக்தி: TKS இளங்கோவன்

திமுக ஒரு தீய சக்தி என <<18602926>>விஜய்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், கரூரில் 41 பேரை கொன்ற தவெக ஒரு கொலைகார சக்தி என்று TKS இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் தாமதமாக வந்ததற்கான காரணத்தை இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சாடினார். அதேநேரம், மக்களுக்காகவே பணியாற்றுகிற ஒரு தூய சக்தியாக திமுக விளங்குவதாகவும் TKS கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 18, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததை தொடர்ந்து, வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தி வருகின்றன. இதனால் வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைந்துள்ளன. அதன்படி, எந்தெந்த வங்கிகள், எவ்வளவு வட்டி விகிதத்தை குறைத்துள்ளன என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். லோன் வாங்கியுள்ள உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 18, 2025
குளிரில் கைக்குழந்தைகளை தினமும் குளிப்பாட்டலாமா?

பிறந்த குழந்தைகளை குளிர் காலத்தில் தினமும் குளிப்பாட்டினால் சளி, காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம் அம்மாக்களுக்கு இருக்கும். அதற்கான நிபுணர்களின் டிப்ஸ் இதோ! *குழந்தையின் சருமம் வறட்சியாகாமல் இருக்க தினமும் குளிக்க வைக்கலாம் *மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வையுங்கள் *கெமிக்கல் உள்ள சோப்பை தவிர்ப்பது நல்லது *ஆயில் மசாஜ் செய்யலாம் *குழந்தை குறைந்த எடையில் இருந்தால் தினமும் குளிப்பாட்ட வேண்டாம்.


