News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News January 28, 2026
திண்டுக்கல் கலெக்டர் அதிரடி உத்தரவு

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு வரும் பிப்1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் (FL1), அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் இயங்காது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News January 28, 2026
மனசாட்சியை அடமானம் வைத்த செங்கோட்டையன்: ADMK

நடிகர் கட்சியில் அடைக்கலமாகியுள்ள EX அமைச்சர்கள் செங்கோட்டையன், கிருஷ்ணன் ஆகியோர் மனசாட்சியை எங்கே அடமானம் வைத்துவிட்டார்கள் என RB உதயக்குமார் கேள்வி எழுப்பினார். MGR, ஜெயலலிதாவின் சேவைகளில் பங்கெடுத்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதிமுகவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து சொல்வதை, அவர்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்கிறதா எனவும் கேட்டுள்ளார். ADMK-ஐ விஜய் ஊழல் கட்சி என விமர்சித்திருந்தார்.
News January 28, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், PM KISAN திட்டத்தின் அடுத்த தவணை வரவு வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், வழக்கம்போல் இத்திட்டத்தின் கீழ் 22-வது தவணையாக ₹2,000 பிப்ரவரியில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகளை அணுகி அடையாள எண்ணை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. e-KYC அப்டேட்டையும் விவசாயிகள் நிறைவு செய்வது அவசியமாகும்.


