News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 27, 2026
ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க ED-க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த பிப்.10-ம் தேதி இதற்கான அனுமதியை பெற்ற ED, அந்த உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தால் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. பண முறைகேடு தொடர்பாக அவர்மீது 2 வழக்குகள் உள்ளது.
News February 27, 2026
8 மணி நேரம் தூங்கினாலும் சோர்வாக இருக்கிறதா?

இன்றைய வேகமான வாழ்க்கையில் தூக்கமின்மை அதிகரித்து வருகிறது. 8 மணி நேரம் தூங்கினாலும் சோர்வாக இருக்கிறதா? அது ஆழ்ந்த தூக்கக் குறைபாடு என டாக்டர்கள் கூறுகின்றனர். தூக்கம், உடலை பழுதுபார்த்தல், ஆற்றல் சேமித்தல், நினைவுகளை ஒழுங்கமைத்தல் போன்ற அத்தியாவசிய செயல்களை செய்கிறது. இரவு சிறந்த தூக்கத்திற்கு மது, கனமான உணவு, மொபைல் பயன்பாடு ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம்.
News February 27, 2026
வரலாற்றில் இன்று

*1964 – சாய்ந்த கோபுரம் மேலும் சரியாமல் பாதுகாக்க இத்தாலிய அரசு உதவி கோரியது. *2002 – கோத்ரா ரயில் எரிப்பு. *2010 – சிலியில் 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர். *1943 – இந்திய அரசியல்வாதி பி.எஸ்.எடியூரப்பா பிறந்த தினம். *2008 – தமிழக எழுத்தாளர் சுஜாதா இறந்த நாள்.


