News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 9, 2026
‘நான் சாகப் போகிறேன்’

‘பெற்றோர் பேச்சை கேட்காமல் தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்யும் பெண்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம். நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். விடைபெறுகிறேன்’. ஆந்திராவில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பத்மாவின்(28) கடைசி வரிகள் இவை. கணவன் வேலைக்குச் செல்லாமல் ஊரை சுற்றி கடன் வாங்கியதால், அப்பெண் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. உணருங்கள்!
News February 9, 2026
அரசுப் பள்ளியில் மாணவி மரணம்

நாமக்கல்லில் அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ரக்ஷிதா என்ற மாணவி, ஆண்டு விழாவிற்காக நடன பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். அப்போது எமனாக வந்த விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது. இதில் வலியில் துடிதுடித்துப்போன மாணவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 9, 2026
NDA கூட்டணியில் தேமுதிக.. முடிவை கூறிய L.முருகன்

தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க திமுகவும், அதிமுகவும் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை கொடுக்கவே இருகட்சிகளும் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக L முருகன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக NDA கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


