News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News March 1, 2026
முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ்: PM மோடி

நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், டெல்லி AI மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தியதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் INC என்றால் இந்திய தேசிய காங்கிரஸ் என அர்த்தம், தற்போது அது முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக(MMC) மாறிவிட்டது என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேசப் பிரிவினைக்கு காரணமான முஸ்லிம் லீக்கின் பாணிலேயே காங்கிரஸ் செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 1, 2026
கொமேனி இறந்தாலும் தாக்குதல் தொடரும்: டிரம்ப்

மிகவும் தீய மனிதரான கொமேனி இறந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது ஈரான் மக்களுக்கு கிடைத்த நீதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கானது என்று SM-ல் அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஈரான் ராணுவம், போலீஸ் உள்ளிட்டோர் மக்களுடன் இணைந்து ஈரானின் நலனுக்கு ஒருசேர உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவும் வரை ஈரான் மீது தாக்குதல் தொடரும் என எச்சரித்துள்ளார்.
News March 1, 2026
போர் பதற்றம்.. தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

வளைகுடா நாடுகளின் வசிக்கும் தமிழரின் நலன் காக்க, அயலகத் தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். <<19264571>>போர் காரணமாக<<>> இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை தமிழர்கள் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உதவி எண்களை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவிற்குள்–1800 309 3793, வெளிநாடு– +91 80 6900 9900, +91 80 6900 9901.


