News March 26, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News January 28, 2026

விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியம்

image

விலங்குகள் கடித்தால் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கீரிப்பிள்ளை கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 3 மாதம் கழித்து உயிரிழந்ததை அடுத்து, சுகாதாரத்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். பூனை, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்பதால், உடனடியாக தடுப்பூசி செலுத்துவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News January 28, 2026

தேமுதிக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்: விஜயபிரபாகரன்

image

கூட்டணி யாருடன் என முடிவாகாத நிலையில், தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளர். நேற்று சிவகாசியில், 2006-ல் சிவகாசி தொகுதியில் தான் தேமுதிக அதிக வாக்குகள் பெற்றதாகவும், மீண்டும் அங்கு உழைக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். இதனால் அவர் சிவகாசியில் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில், தேமுதிக கூட்டணி யாருடன் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.

News January 28, 2026

பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது❤️❤️

image

இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த சிவா-மனோஜினி தம்பதி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இதில், 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த மனோஜினி நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். திருமணமான 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய கொடை கிடைத்திருப்பதால் மனோஜினி மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார்.

error: Content is protected !!