News January 22, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் மதியம் 3.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கா?
Similar News
News November 26, 2025
நாமக்கல்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் நவ.28ந் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 26, 2025
FLASH: ஜெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தைகள்!

கடந்த 2 நாள்களாக சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் இன்று(நவ.26) வர்த்தகம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,253 புள்ளிகளிலும், நிஃப்டி 210 புள்ளிகள் உயர்ந்து 26,095 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. JSW Steel, Adani Ports, Trent, TMPV, Axis Bank நிறுவனங்களின் பங்குகள் 2 – 4% உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 26, 2025
5 விக்கெட்கள் காலி.. தடுமாறும் இந்தியா

549 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விக்கெட்களை இந்தியா இழந்து வருகிறது. குல்தீப் 5, கேப்டன் பண்ட் 13, ஜுரேல் 2 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியுள்ளனர். இந்திய அணி தற்போது 60/5 எடுத்துள்ளது. களத்தில் சுதர்சன் 8, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


