News January 22, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மதியம் 3.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கா?

Similar News

News August 26, 2025

இறுதிவரை போராடிய பி.வி.சிந்து

image

பாரிஸில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து போராடி வென்றார். முதல் சுற்றில் பல்கேரியாவின் கலோயனாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் 17-19 என பின்தங்கி இருந்த சிந்து எதிராளியின் இரண்டு கேம் பாயிண்ட்களை முறியடித்து 23-21 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 21-6 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 39 நிமிடங்கள் நீடித்தது.

News August 26, 2025

நாளை நிலவை பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

image

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சதுர்த்தி திதியில் சந்திரனை பார்க்க கூடாது என்பது வட இந்தியாவில் ஐதீகமாக உள்ளது. அப்படி சந்திரனை பார்த்தால் பொய்யான சாபம், திருட்டு குற்றச்சாட்டால் கறைபடுவார் என விநாயக பெருமான், சந்திரனை சபித்ததாக நாரத ரிஷி, கிருஷ்ணரிடம் கூறியதாகவும் நம்பப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக உண்மை இல்லை என்றபோதிலும் பலரும் கடைபிடிக்கின்றனர்.

News August 26, 2025

BREAKING: தமிழகத்தில் கடன் வட்டி தள்ளுபடி

image

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டது. இதனை மாவட்ட கலெக்டர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தள்ளுபடி போக மீதித் தொகையை பயனாளர்கள் விரைந்து செலுத்துமாறு சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தவணையை செலுத்துவதற்கான அவகாசம் 2026 மார்ச் 31 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!