News March 12, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர் & கன்னியாகுமரி அகிய மாவட்டங்களில் இடி. மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2025
தீய சக்திகளின் கூடாரம் திமுக: அண்ணாமலை

தென்காசி பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ஊழல் கறை படியாத இடமே இல்லை என்பதுதான் திமுக அரசு செய்த சாதனை என விமர்சித்த அவர், தீய சக்திகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கிடைத்தாலும், தமிழகத்தை ரூ.9.5 லட்சம் கோடி கடனில் வைத்திருப்பதுதான் ஸ்டாலினின் செயல்திறன் எனவும் அவர் சாடினார்.
News March 12, 2025
பணவீக்க குறைவு வட்டி விகிதத்தை குறைக்கும்

கோவிட்டிற்கு பின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததால், ரெப்போ வட்டி விகிதத்தை RBI உயர்த்தியது. இதனால், வங்கிகளில் லோன் வாங்குவோர்/வாங்கியோர் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளதால், RBI ரெப்போ வட்டியை குறைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கிய வீட்டுக்கடனின் வட்டியும் குறையும், இனி நீங்கள் வாங்கப் போகும் லோனின் வட்டியும் குறையும்
News March 12, 2025
சாதி அடையாளத்தை அழித்த கலெக்டர்!

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் 11ஆம் வகுப்பு மாணவன் தேவேந்திரனை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவன் படித்த பள்ளிக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் இன்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி சுவர்களில் சில சாதி அடையாளங்கள் வரையப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மாணவர்களை வைத்தே அதை அழிக்கச் செய்தார்.