News August 8, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News

News January 15, 2026

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! APPLY பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News January 15, 2026

பொங்கல் நாளில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

தை பிறந்த முதல் நாளிலேயே அதிமுகவை நோக்கி முக்கியத் தலைவர் நகர்ந்து இருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் பணியை EPS தீவிரப்படுத்தி இருந்தார். அந்த வகையில் இன்று, அமமுக மாநில அமைப்பு செயலாளர் மாதவரம் தட்சிணாமூர்த்தி, EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 15, 2026

பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்: அருண் ராஜ்

image

உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான பொங்கலை கொண்டாடும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய தத்துவம். இந்த தத்துவத்தின்படி, ‘பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்’ எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!