News August 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News January 30, 2026
உள்ளாடையுடன் போட்டோ ஷூட்டுக்கு NO சொன்ன நடிகை

போட்டோஷூட் என்ற சிலர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். போட்டோ எடுக்க சென்ற ரூமிற்குள் இருந்த மூவர் தன்னை ‘Lingerie’ அணியும் படி வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியே வந்து விட்டதாகவும், தற்போதும் அச்சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
MGR போல விஜய் களத்தில் செயல்படவில்லை: செல்லூர்

விஜய் அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யை நாங்கள் திட்டவில்லை, ஆனால் அவர் எங்களை திட்டினால் அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவதெல்லாம் புதிதாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். MGR போல விஜய் களத்தில் இறங்கி அரசியல் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
News January 30, 2026
இப்படியெல்லாம் ஒரு சட்டமா.. அட்டூழியத்தின் உச்சம்!

ஆப்கனில் பெண்களுக்கு எதிரான <<18976535>>தாலிபான்<<>> அரசின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அங்கு புதிதாக கொண்டுவந்துள்ள ஒரு சட்டத்தில், கணவர்களோ/முதலாளிகளோ பெண்களை தங்கள் விருப்பப்படி அடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டால் மட்டும் 15 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் கணவரின் அனுமதியின்றி பெண்கள் உறவினர் வீட்டிற்கு சென்றால் 3 மாதங்கள் சிறை தண்டனை என கூறப்பட்டுள்ளது.


