News August 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News January 9, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

தமிழகத்தில் இம்மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து வகையான பார்களை கட்டாயம் மூட வேண்டும். இந்த நாள்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 9, 2026
திமுக இல்லாத தமிழகமே மக்களின் கனவு: நயினார்

<<18807425>>’உங்கள் கனவை சொல்லுங்க’<<>> திட்டத்தை விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக மக்களின் கனவுகள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், சீரான சட்டம் ஒழுங்கு, திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், பாதுகாப்பான தமிழகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் முன்வைத்துள்ளார். மேலும், முக்கியமாக திமுக இல்லாத தமிழகமே, TN மக்களின் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 9, 2026
வங்கி கணக்கில் ₹2,000.. உடனே இதை பண்ணுங்க

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகை (₹2,000) மார்ச் (அ) ஏப்ரலில் வழங்கப்பட உள்ளது. இதன் பயனாளிகள் e-KYC அப்டேட் செய்வது கட்டாயம். அதன்படி, PM KISAN, Aadhaar Face RD ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டும். பின், PM KISAN ஆப்பில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து LOG IN செய்ய வேண்டும். அதில், beneficiary status page சென்று ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் முகத்தை ஸ்கேன் செய்தால் e-KYC அப்டேட் செய்யப்படும். SHARE


