News August 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News February 8, 2026
40 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயம் செய்யணும்!

40 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!
News February 8, 2026
நாளை இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், மதுக் கடைகள் நாளை 3 மணி நேரத்துக்கு இயங்காது என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பகல் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
டிரம்ப்பின் சதிக்கு மோடி பலியாகிவிட்டார்: திருமா

இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன்களை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களே ஆட்சியாளர்களுக்கு முதன்மையாக இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டிரம்ப்பின் சதி வேலைக்கு PM மோடி பலியாகிவிட்டதாக சாடிய அவர், இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மக்கள் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


