News August 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News January 24, 2026
பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கோர்ட் அதிரடி!

பழனியில் 2023 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பழனி ராசாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (44) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
News January 24, 2026
இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News January 24, 2026
இந்த கூட்டணிக்கு டிக் அடிக்கப்போகிறாரா விஜய்?

தவெகவிடம் தற்போது இரண்டு தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. NDA கூட்டணிக்கு அழைக்கும் பாஜக, கேட்கும் தொகுதிகள், கைகாட்டுபவர்களுக்கு MP சீட், Dy CM சீட் தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் டெல்லி காங்கிரசும் பேசிவருவதாக சொல்கின்றனர். எனவே கூட்டணி வைத்து போட்டியா, தனித்து போட்டியா என பனையூரில் தீவிர ஆலோசனை நடந்துவருவதாக தகவல் கசிந்துள்ளது.


