News August 8, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News

News January 28, 2026

சளி காரணமாக குரல் கரகரப்பாக இருக்கிறதா?

image

சளி காரணமாக உங்கள் குரல் கரகரப்பாக இருப்பதற்கோ அல்லது குரல் இழப்பிற்கோ குரல்வளை அழற்சியே காரணம். ஏனெனில், இத்தொற்றினால் குரல் நாண்கள் வீக்கமடையும். எனவே விரைவாக குணமடைய, பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். வெதுவெதுப்பான உப்பு நீரால் வாய் கொப்பளிப்பதும், தேன் அருந்துவதும் வீக்கத்தைக் குறைக்கும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்வும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

News January 28, 2026

கம்பீரை நீக்க பிசிசிஐ-யிடம் கோரிக்கை!

image

டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து BCCI நீக்க வேண்டும் என இந்திய அணியின் Ex வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். மேலும், IPL வெற்றிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைப் பயிற்சியாளராக நியமிப்பது சரியல்ல என்றும், கம்பீருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த VVS லட்சுமணை தலைமைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

News January 28, 2026

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

*அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும். *சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர். *ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். *ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை, அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம். *எப்போதோ சொன்ன ஒரு கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்து கொண்டிருக்கமாட்டான்.

error: Content is protected !!