News August 8, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலுர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News

News November 12, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

கடந்த 2 நாள்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11,600-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 12, 2025

30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

image

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News November 12, 2025

‘தற்குறி’ என சொல்லாதீங்க: எழிலன்

image

ஒரு சாராரை ‘தற்குறி’ என திமுகவினர் விமர்சிக்கின்றனர். இந்நிலையில், ‘தற்குறிகள்’ என விமர்சனம் செய்வது தவறான அணுகுமுறை என்று திமுக MLA எழிலன் தெரிவித்துள்ளார். நாம் அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை, உரையாடவில்லை; அது நம்முடைய தவறு என்று கூறினார். மேலும், அவர்கள் சங்கிகள் கிடையாது; அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசினால்தான் போலியான தலைவர்களைப் பற்றி உணர்வார்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்.

error: Content is protected !!