News July 28, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News December 3, 2025
கார்த்திகை மகா தீபம் PHOTOS

தமிழகத்தில் இன்று கார்த்திகை மகா தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மகா தீபம் போன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் மகா தீபம் ஏற்பட்டது. எங்கெல்லாம் மகா தீபம் ஏற்பட்டது என்று, உங்களுக்காக மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News December 3, 2025
BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

2-வது ODI-ல் 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. ஏய்டன் மார்க்ரம்(110) சதம் அடித்து அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து பிரீட்ஷி(68) மற்றும் டிவால்ட் பிரேவிஸ்(54) அதிரடியாக விளையாட, கடைசி ஓவரில் SA வெற்றியை தனதாக்கியது. இருவர் சதம் அடித்தும் பந்து வீச்சு எடுபடாததால் இந்தியா தோல்வியை தழுவியது.
News December 3, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.


