News July 14, 2024
அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News November 22, 2025
TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது: அன்புமணி

சேலத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆளும்கட்சி நிர்வாகியே சுட்டுக்கொலை செய்யப்படும் அளவுக்கு TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக கூறியுள்ள அவர், தமிழக மக்களுக்கு என்னதான் பாதுகாப்பு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 22, 2025
மல்லிகை விலை ₹4,000ஆக உயர்ந்தது!

சங்கரன்கோவில் மலர் சந்தையில் நேற்று ₹1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று(நவ.22) கிலோவுக்கு ₹4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலை சீசன் மற்றும் நாளை முகூர்த்த தினம் என்பதால் தோவாளை, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, மதுரை, ஓசூர் உள்ளிட்ட மலர் சந்தைகளிலும், மல்லிகை மட்டுமல்லாமல் கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
News November 22, 2025
டாக்டர் Fish பற்றி உங்களுக்கு தெரியுமா?

டாக்டர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் மீன்கள் கூட நமக்கு சிகிச்சை அளிக்கும். எந்த மீன் என யோசிக்கிறீர்களா? மீன் ஸ்பாக்களுக்கு சென்றால் காலை கடிக்க விடப்படும் Garra rufa மீன்களே அவை. துருக்கியில் வெந்நீரூற்றுகளின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு பற்கள் கிடையாது. உதடுகள் மூலமே இறந்த செல்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை உண்ணும். உலகின் பல தோல் நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


