News June 26, 2024

அடுத்த 3 மணி நேரங்களுக்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

அமெரிக்காவில் ஒரேநாளில் 1,800 விமானங்கள் ரத்து

image

அமெரிக்காவில் வழக்கத்தை விட கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து 1,802 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்த நிலையில், 22,349 விமானங்கள் புறப்பாடும் தாமதமாகியுள்ளன. கடைசி நேரத்தில் விமானம் ரத்தானதால், இந்தியா வரவிருந்த பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News December 27, 2025

தலைநகரம் இல்லாத நாடு எது தெரியுமா?

image

பொதுவாக ஒருநாடு சீராக இயங்குவதற்கு தலைநகர் என்பது அவசியம். அங்குதான் நாட்டின் முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்படும். ஆனால் தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவ்ரு என்ற நாட்டிற்கு தலைநகரே கிடையாது. காரணம் அந்த தீவு நாட்டின் மொத்த பரப்பரளவே 21sq km., தான். உலகின் 3-வது சிறிய நாடான நவ்ருவில் மொத்த மக்கள்தொகை 12 ஆயிரம் மட்டுமே. எனவே தான் அங்கு தலைநகர் தேவையற்றது என அந்நாட்டு அரசு கருதுகிறது.

News December 27, 2025

RSS-க்கு எதிராக விஜய் வாய் திறந்தாரா? திருமா

image

கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதலை பற்றி விஜய் வாய் திறந்தாரா என திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யும் சீமானும் RSS, சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தவெக ஒருபுறம் பெரியாரிய, திராவிட அரசியலை பேசுகிறோம் என்றும், நாதக தமிழ் தேசியம் பேசுகிறோம் என்றும் நாடகமாடுகிறார்கள். இதை TN மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பேசினார்.

error: Content is protected !!