News March 28, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் இரவு 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
பெட்டிக் கடைகளில் SIR படிவங்கள் விநியோகம்: அதிமுக

SIR படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் கொடுத்து விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக MP இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். ஆனால், கடைகளில் SIR படிவம் விநியோகம் செய்தால், எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதற்கு பின்னால் DMK இருப்பதாக விமர்சித்துள்ளார்.
News November 8, 2025
National Roundup: சபரிமலையில் செயற்கை குங்குமத்திற்கு தடை

*கர்நாடகாவில் ஒரு டன் கரும்பு 3,300-க்கு கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. *டெல்லியில் காற்று மாசினால் அரசு அலுவலகங்களின் பணி நேரம் காலை 10 மணி-மாலை 6.30 மணியாக மாற்றம். *சபரிமலையில் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிப்பு. *எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை PM மோடி இன்று தொடங்கி வைக்கிறார். *அரசு முறை பயணமாக ஜனாதிபதி இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம்.
News November 8, 2025
Sports Roundup: இந்தியா A முன்னிலை

*தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியின், 2-ம் நாள் முடிவில் இந்தியா A அணி 112 ரன்கள் முன்னிலை. *ரஞ்சி கோப்பையில் இன்று ஆந்திரா Vs தமிழகம் மோதல். *2025 மகளிர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு. *ஆசிய பார்வையற்றோர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில், கபில் பர்மர் வெள்ளி வென்றார். *Alto ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் அரையிறுதிக்கு முன்னேற்றம்.


