News August 16, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என RMC தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு தென்காசி, நெல்லை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, குமரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.

Similar News

News November 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
▶பொருள்: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

News November 23, 2025

டெல்லி காற்றுமாசு: 50% பேருக்கு WFH கொடுக்க அறிவுறுத்தல்

image

டெல்லியில் காற்றுமாசு நாளுக்கு நாள் மிக மோசமாகி வரும் நிலையில் முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மக்கள் குப்பைகள் எரிக்க கூடாது என தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங், அவ்வாறு செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News November 23, 2025

நிதியமைச்சரின் பெயரில் ₹1.47 கோடி மோசடி

image

SM-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ₹1.47 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ₹21,000 முதலீடு செய்தால் ₹60,000 லாபம் கிடைக்கும் என்று போலி பங்குச் சந்தை திட்டங்களை சைபர் குற்றவாளிகள் உருவாக்கியுள்ளனர். இதை நம்பி மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர், தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் அவர்களிடம் இழந்துள்ளார். ஆசைவார்த்தையை நம்பி ஏமாறாதீங்க மக்களே!

error: Content is protected !!