News December 5, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு வானிலை பிரேக் விட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

Similar News

News December 31, 2025

சற்றுமுன்: இளம் கிரிக்கெட் வீரர் காலமானார்

image

8 ஆண்டுகள் கோமாவில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் அக்‌ஷு ஃபெர்னாண்டோ (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். U19 போட்டிகளில் விளையாடி வந்த இவர், 2018-ம் ஆண்டு தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 31, 2025

விஜய் அரசியலில் வெல்ல இதை செய்யணும்: H.வினோத்

image

விஜய் அரசியலில் இறங்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன் என ‘ஜனநாயகன்’ இயக்குநர் H.வினோத் தெரிவித்துள்ளார். அறிவாளிகள், முட்டாள்கள், புத்திசாலித்தனமாக மோசடி செய்பவர்கள், முட்டாள்தனமாக மோசடி செய்பவர்கள் என அரசியலில் 4 விதமான மனிதர்களை தான் பார்ப்பதாகவும், இந்த 4 வகையினரையும் விஜய் சமாளித்தால், கண்டிப்பாக அவரால் அரசியலில் வெற்றி பெறமுடியும் என்றும் H.வினோத் கூறியுள்ளார்.

News December 31, 2025

2025-ல் மாவட்டம் வாரியாக நாய்க்கடி பாதிப்பு!

image

2025-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 6.23 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ல் இருந்ததை விட 2025-ல் 1.5 லட்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிகளவில் நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்ற டாப் மாவட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை இருக்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!