News December 5, 2024
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு வானிலை பிரேக் விட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
Similar News
News January 16, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.80 லட்சம் மோசடி

ஸ்ரீவியில் நீதிமன்றத்தில் ஏலம் விடப்படும் வாகனங்களை குறைந்த விலைக்கு எடுத்துத் தருவதாகக் கூறி,கட்டட ஒப்பந்ததாரர் ராமசாமியிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக முருகேசகண்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணத்தை திரும்ப கேட்டபோது வழங்கப்பட்ட காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதால், ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
News January 16, 2026
இன்று இந்த விளக்கு ஏற்றுங்க.. செல்வ செழிப்பு பெருகும்!

மாட்டுப் பொங்கலில் பசு மாடு இல்லாதவர்கள், பஞ்ச காவிய விளக்கு ஏற்றும்படி ஆன்மீகவாதிகள் அறிவுறுத்துகின்றனர். பசுவின் நெய், பால், சாணம், தயிர், கோமியம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவதே பஞ்ச காவிய விளக்கு. இந்த விளக்கை ஏற்றி வழிபாட்டால், செல்வ செழிப்பு பெருகுமாம். அதேபோல, எங்கேனும் பசுக்களை பார்த்தால், ஏதேனும் ஒரு உணவுப் பொருளை வாங்கி கொடுங்கள். இது 30 முக்கோடி தேவர்களின் அருளையும் பெற்றுத் தரும்.
News January 16, 2026
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.


