News December 5, 2024
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு வானிலை பிரேக் விட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
Similar News
News December 20, 2025
திருவள்ளூரில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

திருவள்ளூர் மக்களே.., வீட்டில் கரண்ட் வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
Data சீக்கிரம் காலியாகாது.. இத பண்ணுங்க!

இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்துட்டு இருக்கப்போ, 50% DATA காலி என SMS வருதா? இந்த சீக்ரெட் செட்டிங்-ஐ On பண்ணா போதும் DATA குறைவா செலவாகும். ▶உங்களுடைய INSTA PROFILE-க்கு போங்க ▶அங்க Top Right-ல காட்டுற 3 லைன்ஸ க்ளிக் பண்ணி, DATA-னு தேடுங்க ▶DATA USAGE & MEDIA QUALITY-அ க்ளிக் பண்ணி DATA SAVER-அ ON பண்ணிக்கோங்க. அதான் இனி DATA கம்மியா செலவாகுமேன்னு, தொடர்ந்து ரீல்ஸ் பார்க்காதீங்க மக்களே. SHARE IT.
News December 20, 2025
எங்களிடமிருந்து முருகரை பிரிக்க முடியாது: சேகர்பாபு

CM ஸ்டாலினுக்கு, முருகன் துணையாக இருப்பதால் தான், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக பெரிதுப்படுத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜகவின் திட்டம் எடுபடாது என்று கூறிய அவர், மாநாடு நடத்தி முருகன் புகழுக்கு, மேலும் புகழ் சேர்த்தது திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டார். எந்த சக்தியாலும் முருகரை தங்களிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.


