News December 4, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூருக்கு மழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News January 14, 2026

‘ஆசிரியர் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பு’

image

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசே பொறுப்பு என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும் வாழ்க்கையும் எப்படி புரியும் என அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். கண்ணனின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

News January 14, 2026

2-வது ODI: வெற்றியை நோக்கி நியூசிலாந்து

image

ராஜ்கோட்டில் நடக்கும் 2-வது ODI-ல், நியூசிலாந்து வெற்றி முகத்தில் உள்ளது. 285 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய NZ, முதல் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு டேரில் மிட்செல், வில் யங் அபாரமாக ஆடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதி 10 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன. NZ-ன் வெற்றியை தடுக்க இந்தியா என்ன செய்யணும்?

News January 14, 2026

இன்று ₹2,000, ₹5,000 ₹10,000

image

பொங்கல் பண்டிகை எதிரொலியால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ₹5,000, ₹10,000 முதல் ₹12,000 வரை விற்பனையாகிறது. அதேபோல கிலோ பிச்சிப் பூ ₹1,200, முல்லை ₹2,000 வரை விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவு, மழையின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவினால் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!