News December 4, 2024
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூருக்கு மழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News November 9, 2025
ஒரு செம்மரத்தை கூட இனி தொட முடியாது: பவன் கல்யாண்

பல ஆண்டுகளாக ஆந்திராவில் செம்மர கடத்தல் நடைபெற்று வருகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக ஏராளமான தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செம்மர கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர DCM பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், ஒரு செம்மரத்தை கூட இனி யாரும் தொட துணிய மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
News November 9, 2025
விஜய் கட்சியில் இருந்து நீக்கம்.. சர்ச்சை வெடித்தது

தவெகவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணம் பெற்று கொண்டு பொறுப்பு வழங்குவதோடு, 7 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. விஜய் அறிவித்த மகளிர் அணி பொறுப்பாளர்களை, மாவட்ட பொறுப்பாளர்களான கோபி, தனம் ஆகியோர் மாற்றியதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தி.மலை, விழுப்புரம், திருச்சியில் பணம் பெற்றுக் கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
News November 9, 2025
இறுதி சடங்கில் கண்விழித்து ஷாக் கொடுத்த நபர்!

கர்நாடகாவின் பெட்டகேரி பகுதியில், நாராயணனுக்கு (38) பித்தப்பை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால், தீவிர சிகிச்சைக்கு பின், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இனி அவரை பார்க்கவே முடியாது என்ற தவிப்பில், நண்பர்களும், உறவினர்களும் இறுதி மரியாதை செய்த நிலையில், திடீரென கண்விழித்து அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் கொடுத்துள்ளார் நாராயணன். தற்போது, அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


