News December 4, 2024
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூருக்கு மழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 28, 2025
குழந்தைகளின் உயிருக்கு உலைவைக்கும் கிரீம் பிஸ்கட்

குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது கிரீம் பிஸ்கட். அவர்களுக்கு இதை வாங்கித்தரும் பெற்றோருக்கு இதனால் ஏற்படும் அபாயத்தை பற்றி தெரிவதில்லை. இதிலுள்ள அளவுக்கு அதிகமான சர்க்கரை & மைதா, இளம் வயதிலேயே நீரிழிவு, இதய நோய்களை ஏற்படுத்துகிறதாம். இதில் சேர்க்கப்படும் நிறமிகள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் இதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டாமென டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News December 28, 2025
சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், இன்று Ex. MLA <<18692753>>சி.கிருஷ்ணன்<<>> அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் OPS, டிடிவி தினகரன் இணைவார்களா என செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டனர். அதற்கு, பொங்கலுக்கு முன் இருவரும் இணைவார்கள், அதிமுக Ex அமைச்சர்கள் சிலரும் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
News December 28, 2025
மீனவர்கள் கைதை தடுக்க CM ஸ்டாலின் கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க கோரி CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளால், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


