News March 26, 2025
10 மாவட்டங்களில் மழை பெய்யும்

அடுத்த 2 மணி நேரத்தில் (7 மணி வரை) தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Similar News
News March 29, 2025
சனிப்பெயர்ச்சி: நற்பலன்கள் பெற பொதுவான பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சி பரிகாரம்: *தினசரி விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். *விநாயகர் அகவல், ஹனுமான் சாலீசா, சுந்தரகாண்டம் பாராயணம் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ளலாம். *அவ்வப்போது கணபதி ஹோமம் (அ) பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்யலாம். *தினமும் முன்னோர்கள் வழிபாடு செய்வது (குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது). *தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதும் சிறந்த பரிகாரமாகும் என்கின்றனர் நம்பிக்கையுள்ளோர்.
News March 29, 2025
பழம்பெரும் பாடகி காலமானார்

அசாமை சேர்ந்த பழம்பெரும் பாடகி ஹீரா தாஸ் (73) காலமானார். பிரபல இசையமைப்பாளர் ஜே.பி.தாஸின் மனைவியான இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. அசாமிய மொழியில், காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த அவரது மரணத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 29, 2025
அன்று வங்கதேசம்; இன்று நேபாளம்?

நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடந்துவரும் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 100-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்றவில்லை என்பதால் மீண்டும் மன்னராட்சி வேண்டுமென்று எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வங்கதேசத்தில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருந்தன. இதிலும் அப்படி இருக்குமோ?