News April 16, 2025

21 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவாரூர், நீலகிரி & தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் & ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News

News September 17, 2025

இடையூறு செய்யும் காவிக்கொள்கை: ஸ்டாலின்

image

தமிழக வளர்ச்சிக்கு காவிக்கொள்கை இடையூறு செய்வதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், 2,000 ஆண்டுகளாக காவிக்கொள்கையுடன் போராடி வருகிறோம் என்றார். நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சியான திமுக, யாருடைய மிரட்டலுக்கும் பயப்படாது என்றும் கூறியுள்ளார். 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்துவது எப்படி?

image

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கமானது 3 வயது வரை இருக்கலாம். அதற்கும் மேலே தொடரும்போது, அவர்களுக்கு பல் சார்ந்த பிரச்னைகளும் பேச்சுத்திறன் குறைபாடுகளும் ஏற்படக்கூடும். இதனை தடுக்க ➤குழந்தையின் விரலில் வேப்பெண்ணையை தடவலாம், ➤இப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கலாம். ➤தீவிரமாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் நலமருத்துவரின் உதவியை நாடலாம். SHARE.

News September 17, 2025

கணவருக்கு இது தார்மீக பொறுப்பு: கொல்கத்தா HC

image

நல்ல உடல்தகுதியுள்ள கணவர், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது என்பது சமூக, தார்மீக பொறுப்பு என்று கொல்கத்தா HC தெரிவித்துள்ளது. தனக்கு வேலையும் வருமானமும் இல்லை என்ற கணவரின் வாதத்தை ஏற்க மறுத்த HC, பராமரிப்பு தொகையாக மாதம் ₹4,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. கணவனின் குடும்பத்தார் விவாகரத்து கோர வற்புறுத்தியதால், பராமரிப்பு தொகை வழங்க கோரிய மருமகளின் மனு மீது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!