News November 6, 2025

RAIN ALERT: 19 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது!

image

பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், தி.மலையில் இடியுடன் மழையும், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News November 6, 2025

Business Roundup: அனில் அம்பானிக்கு ED சம்மன்

image

*இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன *வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக அனில் அம்பானிக்கு ED சம்மன் *₹4 கோடி வருமான வரித்துறை வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சாதகமான தீர்ப்பு *பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு வங்கிகள் சங்கம் கண்டனம் *வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் மின்விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

News November 6, 2025

டாப் 10 அசுத்தமான நகரங்கள்.. தமிழ்நாடு நம்பர் 1

image

இந்தியாவில் நகர்ப்புற தூய்மை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு, ஸ்வச் பாரத் மிஷன் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், சிறிய நகரங்களை விட பெருநகரங்கள் மோசமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.

News November 6, 2025

ராகுலுக்கு, பிரஷாந்த் கிஷோர் ஆதரவு

image

பிஹார் தேர்தலில், காங்கிரஸும், ஜன் சுராஜ் கட்சியும் எதிரெதிராக களம் காண்கின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ECI-க்கு எதிராக ராகுல் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்ற அவர், வாக்குத் திருட்டு பிஹார் தேர்தல் முடிவை மாற்றலாம் என்ற ராகுலின் அச்சத்தை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

error: Content is protected !!