News October 21, 2025
ரயில்வேயில் வேலை: 5,810 பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிகல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்றுமுதல், வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள்ளும், தேர்ந்தெடுக்கும் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டம் பெற்றிருக்கவும் வேண்டும். <
Similar News
News October 21, 2025
ஏமாற்றிய காதலன்.. சூனியக்காரியை நாடிய காதலி

பிரேக்-அப் செய்த காதலனை, பழிவாங்க காதலி ஒருவர் சூனியக்காரியின் உதவியை நாடிய சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது. இப்பிரச்னையில், சூனியம் வைக்க வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த சூனியக்காரி, மனநல சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்த தீர்வு என்று அப்பெண்ணுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இவரின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகின்றனர். நீங்கள் காதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி? கமெண்ட் பண்ணுங்க.
News October 21, 2025
Ombrophobia: மழையை பார்த்து பயப்படும் மனிதர்கள்

மழையை பார்த்தால் சிலருக்கு அச்சம் ஏற்படும். அதுவே Ombrophobia எனப்படுகிறது. இது பொதுவாக இளம் பருவத்தினர், குழந்தைகளிடையே காணப்படுகிறது. மழை பெய்யும் என செய்திகள் வெளியானால், அன்று எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வெளியில் செல்ல மாட்டார்கள். படபடப்பு, நடுக்கம், பயம், மார்பு வலி, தலைச்சுற்றல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதற்கான சிகிச்சை எதுவும் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News October 21, 2025
அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: நயினார்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில், வெறும் காணொலி கூட்டங்களோடு நிறுத்திவிடாது, போர்க்கால அடிப்படையில் போதிய முன்னேற்பாடுகளை செய்யவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், மீட்பு பணிகளில் அரசுடன் இணைந்து பாஜக உறுதுணையாக களப்பணியாற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.