News April 2, 2024
ரயில்வே வருமானம் புதிய உச்சம்

ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் சரக்குகள் கையாளுதல், பயணிகள் கட்டணம் மூலம் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி கிடைத்தது. இந்நிலையில் 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2.6 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 1,591 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியும் சாதனை படைத்துள்ளது. ரயில்வேயின் அதிகபட்ச வருவாய் இது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
தி.மலை: சீட்டு கட்டுபவர்கள் நோட் பண்ணிக்கோங்க!

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
INDIA – USA: 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.
News October 31, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.


