News August 15, 2024
ராகுல் மக்களின் தலைவராகவே இருப்பார்: காங்கிரஸ்

டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ராகுல் காந்திக்கு 5வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்., செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், சிறிய மனப்பான்மை கொண்டவர்களிடம் இருந்து பெருந்தன்மையை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என விமர்சித்தார். மேலும், ராகுல் 50வது வரிசையில் அமர்ந்தாலும் மக்களின் தலைவராகவே இருப்பார் என்றார்.
Similar News
News August 15, 2025
ஆகஸ்ட் 15: வரலாற்றில் இன்று

* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.
News August 15, 2025
CM ஸ்டாலின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு: திருமாவளவன்

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதே சமயம் தூய்மைப் பணிகளை தனியார் மையம் ஆக்கப்படுவதை அரசு கைவிட வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது தூய்மை பணியாளர்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல் கவலைப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
News August 15, 2025
சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்

*வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.
* கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
* உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
* வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.