News July 7, 2024

விசாரணைக்கு ஆஜராகாத ராகுல்

image

2018ல் அமித் ஷாவை குறிவைத்து, ஒரு கொலையாளிதான் பாஜகவில் தலைவராக முடியும் என ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கடந்த 2019ல் மோடி என்ற பெயரைக் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதற்கும் வழக்கு தொடரப்பட்டது. இந்த இரு வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், ராகுல் நேரில் ஆஜராகவில்லை. எனவே அவர் மீது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 23, 2025

வாக்கு திருட்டு நடக்கும் வரை உழலும் நீடிக்கும்: ராகுல்

image

வாக்குகளை திருடி, அமைப்புகளை கைப்பற்றி பாஜக ஆட்சியில் அமர்ந்ததால் தான், நாட்டில் வேலையின்மை தலை விரித்து ஆடுவதாக ராகுல் காந்தி சாடியுள்ளார். வருங்காலத்திற்காக இளைஞர்கள் கடினமாக உழைத்து வரும் நிலையில், PM மோடியோ தனது பணக்கார நண்பர்கள் ஆதாயம் அடைய பாடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், வாக்கு திருட்டு நடைபெறும் வரை, இந்தியாவில் ஊழலும், வேலையின்மையும் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

10, 12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமா?

image

தமிழக சட்டப் பேரவை தேர்தல் 2026 மே 2-வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்னரே முடிப்பது மட்டுமல்லாமல், முடிவுகளையும் மே முதல் வாரத்திலேயே வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்.24 என்பதால், ஏப்.10-ம் தேதிக்குள் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாம்.

News September 23, 2025

12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைவதை தவிர்க்க, வெளியே செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.

error: Content is protected !!