News September 9, 2025
2029-ல் ராகுல் காந்தி தான் PM: டி.கே.சிவக்குமார் உறுதி

2029-ல் ராகுல் காந்தி கண்டிப்பாக பிரதமர் ஆவார் என கர்நாடகா DCM டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம் நாட்டிற்கு ஒரு மாற்றம் வேண்டும் எனவும், நமது அண்டை நாடுகள் எல்லாம் எதிரிகள் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுலை முதன்முதலாக CM ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். சமீபத்தில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், 2029-ல் ராகுல் PM ஆவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 10, 2025
அதிமுகவில் இருந்து நீக்கம்

செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து EPS அதிரடியாக நீக்கியுள்ளார். ஈரோடு மேற்கு பொறுப்பாளர்கள் செல்வன், அருள் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தாணி பேரூராட்சி முன்னாள் துணை செயலாளர் மருதமுத்து, மாவட்ட IT பிரிவு துணை தலைவர் மணிகண்டனை அடிப்படை உறுப்பினர், பொறுப்புகளில் இருந்தும் EPS நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
News September 10, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு… திமுகவை சாடிய அன்புமணி

சமூகநீதியில் அக்கறை இருப்பது போல் திமுக நடிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் 2வது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ளதை தனது X தள பக்கத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 3 முறை வாய்ப்பு கிடைத்தும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 10, ஆவணி 25 ▶கிழமை: புதன்கிழமை ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை