News August 5, 2024
அமைச்சர் ஜெய்சங்கருடன் ராகுல் காந்தி சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். வங்கதேச விவகாரம் தொடர்பாகவும், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்துள்ளதை பற்றியும் ராகுல் காந்தி, அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து வங்கதேச நிலைமை தொடர்பாக பிரதமர் மோடியுடன், ஜெய்சங்கர் விரிவான ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Similar News
News January 20, 2026
மகளிர் உரிமைத் தொகை.. பேரவையில் HAPPY அறிவிப்பு

2021-ல் தொடங்கிய CM ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேரவையில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
அப்போ 40 வயசானா அவ்ளோ தானா?

நீங்கள் 40 வயதை நெருங்குகிறீர்களா? கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா? அப்படியென்றால் இச்செய்தி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஒரு காலத்தில் அனுபவம், திறமையின் உச்சமாக 40 வயது கருதப்பட்டது. ஆனால் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையால் தற்போது 40 வயதை தொட்டாலே கார்ப்பரேட்டில் பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் அவர்களை விட இளம் வயதினர் திறன்மிக்கவர்களாக கருதப்படுகின்றனர்.
News January 20, 2026
மைக் ஆஃப் செய்யப்படவில்லை: அமைச்சர் ரகுபதி

சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தும், அரசின் உரையை கவர்னர் வாசிக்காமல் வெளியேறியதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறிய அவர், எதிர்க்கட்சிகள் கூட சொல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கவர்னர் வெளியேறிய உடனே 3 பக்க அறிக்கை வருகிறது என்றால் அது திட்டமிடப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


