News September 29, 2025
அக்கறையுடன் விசாரித்த ராகுல் காந்தி: CM ஸ்டாலின்

கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் ராகுல் காந்தி விசாரித்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விசாரித்ததாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை அளித்ததாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் ஆழ்ந்த இரங்கலையும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
Similar News
News September 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 29, புரட்டாசி 13 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: அதிதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News September 29, 2025
ஆசிய கோப்பையில் இந்தியாவின் ஆதிக்கம்: முர்மு

9-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று இந்தியா அணி அபார சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியை ஜனாதிபதி திரெளபதி முர்மு பாராட்டியுள்ளார். இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இருந்து, இந்தியா தனது ஆதிக்கத்தை விளையாட்டில் செலுத்தியுள்ளதாக முர்மு குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் விளையாட்டுகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News September 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க