News April 25, 2025

காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, தளபதி!

image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கிறார். அதேபோல், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி காஷ்மீர் சென்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

Similar News

News December 31, 2025

BREAKING: கூட்டணி.. EPS முடிவை மாற்றினார்

image

அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதாக மா.செ கூட்டத்தில் EPS பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் SIR பணிகளில் அதிமுகவினர் சரியாக ஈடுபடவில்லை என பேசியுள்ள அவர், மக்கள் & களப் பணியில் முழுமையாக ஈடுபடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இனி கூட்டணி பற்றி தான் பார்த்துக்கொள்வதாக கூறிய அவர், மற்றவர்கள் யாரும் தலையிட வேண்டாம் எனவும் முடிவை மாற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது.

News December 31, 2025

காலண்டரும்.. புது வருஷமும்!

image

புது வருடம் வந்தாலே, எந்த கடையில் காலண்டர் தருவார்கள் என தேடுபவர்களே அதிகம். சிறு அளவில் வியாபாரம் செய்தாலும், உரிமையாக காலண்டரை கேட்டு வாங்குபவர்கள், பெரிய ஷாப்பிங் என்றால் அந்த சிறு கடைகளை மறந்துவிடுகிறார்கள். இப்படியானவர்களை பார்க்கும் போது, ‘ஆன்லைனிலும், மால்களிலும் ஷாப்பிங் செய்யும் உனக்கு, சிறு கடைகளின் காலண்டர் எதற்கு?’ என்றுதான் கேட்க தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

News December 31, 2025

41 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்: CTR நிர்மல் குமார்

image

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் 3 நாள்களாக TVK நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வந்த விசாரணை இன்று நிறைவு பெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல் குமார், சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது. கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்தோம். 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!