News April 25, 2025
காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, தளபதி!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கிறார். அதேபோல், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி காஷ்மீர் சென்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
Similar News
News January 10, 2026
‘TAPS’.. புதிய மொந்தையில் பழைய கள்: EPS விளாசல்

மத்திய அரசின் UPS-யை பெயர் மாற்றம் செய்து <<18749969>>அறிவிக்கப்பட்டுள்ள TAPS<<>>, ஒரு ஏமாற்றும் திட்டம் என EPS விமர்சித்துள்ளார். இதனை, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ எனவும் சாடியுள்ளார். அத்துடன், பழைய பென்ஷன் திட்டத்தின் முக்கிய அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அவ்வப்போது பென்ஷனை உயர்த்தி மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை TAPS-ல் இல்லை எனவும், 10% சம்பளம் பிடித்தம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 10, 2026
மத்திய அரசின் முடிவை வரவேற்று PM-க்கு CM கடிதம்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இதை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த மாநில CM-க்கள், பிரதிநிதிகள் குழுவை அமைக்க வலியுறுத்திய அவர், சமூக இயக்கவியல், சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளை கவனத்தோடு கையாளவில்லை என்றால், சமூக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
News January 10, 2026
‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

‘எனது தற்கொலை எண்ணங்களை வெல்வேன் என நினைத்தேன். ஆனால், அதில் தோல்வி அடைந்துவிட்டேன். இந்த வேலை எனக்கு கடினமாக இருக்கிறது’. டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டில் எழுத்தாளராக பணியாற்றிய ஹரிஷ் சிங் மஹரின் கடைசி வரிகள் இவை. 60% மாற்றுத் திறனாளியான அவர், வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!


