News April 25, 2025

காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, தளபதி!

image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கிறார். அதேபோல், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி காஷ்மீர் சென்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

Similar News

News December 5, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் பச்சை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, பெரம்பலூர் அருகே அமைந்துள்ள குரும்பலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதுபோல மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவக்குடி, கொட்டரை, மருதையாறு உள்ளிட்ட 7 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

News December 5, 2025

ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

News December 5, 2025

பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

image

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.

error: Content is protected !!