News April 26, 2024

சொம்பைக் காட்டி மோடியை விமர்சித்த ராகுல்

image

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுக் காலிச் சொம்பைப் பிரதமர் கொடுத்துள்ளதாக ராகுல் விமர்சித்துள்ளார். பாஜகவை, பாரதிய ஜனதா கட்சி என்பதற்குப் பதில் மோடியின் பாரதிய சொம்பு கட்சி என்று அழைக்கலாம் என்று அவர் விமர்சித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா வந்த மோடிக்கு எதிராக காலி சொம்பைக் காட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தற்போது ராகுலும் சொம்பைக் கையில் எடுத்துள்ளார்.

Similar News

News November 14, 2025

சீனாவுக்கு செக் வைக்க எல்லையில் விமானப்படை தளம்

image

சீனாவிற்கு செக் வைக்கும் விதமாக, சர்வதேச எல்லைக்கோட்டில் இருந்து 35 கி.மீ., தொலைவில், நியோமோ என்ற இந்திய விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13,700 அடி உயரத்தில், லடாக்கில் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான விமானப்படை தளம் இதுவாகும். 2.7 கி.மீ., நீளமுள்ள இதன் ஓடுபாதையில் விமானங்கள் எளிதாக தரையிறங்க முடியும். இதன்மூலம், படைகள், ராணுவ தளவாடங்கள், விரைவாக குவிக்க முடியும்.

News November 14, 2025

41 பேரை கொன்றவன் தலைவனா? யுகபாரதி

image

திமுக சார்பில் சென்னையில் அறிவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தெருவில் கூட்டத்தை கூட்டி 41 பேரை கொன்றவன் தலைவனா என விஜய்யை மறைமுகமாக சாடினார். 1950-களில் அண்ணா கூட்டம் நடத்திய போது, பணம் வசூல் செய்து கூட்டத்தை நடத்திய கிட்டப்பாவிற்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. அதை புரிந்து கொண்ட அண்ணா, அவரை MLA ஆக்கினார், அவர் தான் தலைவர் என்றும் யுகபாரதி கூறினார்.

News November 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 519 ▶குறள்: வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. ▶பொருள்: தன் பதவியில் செயல்திறன் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால், அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீங்குவாள்.

error: Content is protected !!