News June 18, 2024
வயநாடு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த ராகுல்

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் அறிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ராகுல் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. கேரளாவை வாக்கு சேகரிக்கும் ஏடிஎம் இயந்திரமாக மட்டுமே காங்கிரஸ் பார்க்கிறது” என விமர்சித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
PM மோடியுடன் ரஷ்ய DPM முக்கிய ஆலோசனை

2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய DPM டெனிஸ் மந்த்ரொவ் PM மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதில் இருதரப்புக்கு இடையேயான உறவு, வர்த்தகம், உரங்கள் விநியோகம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார். அதோடு, 2025-ல் நடந்த இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு, இருதரப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News April 3, 2026
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு மசோதாவுக்கு தவெக எதிர்ப்பு

வெளிநாட்டு நிதி பங்களிப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி & மருத்துவத் தொண்டு நிறுவனங்களை முடக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு துடிப்பது ஏன் எனவும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
News April 3, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தாலே புதிய பாதை நமக்காகத் திறந்தே இருக்கும் *வெற்றி என்பது நம் நிழல் போல. வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது நம் பின்னால் வரும் *திடமான மனதுடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம் *முடியும் வரை முயற்சி செய், உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை *சாவி இல்லாத பூட்டு இருக்காது, தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது


