News May 16, 2024

திமுக நிர்வாகி மீது ராதிகா சரத்குமார் புகார்

image

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே ஆளுநர் ரவி மற்றும் குஷ்பூ குறித்து அவதூறாக பேசியதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராதிகா குறித்து அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், இன்று ராதிகா புகார் அளித்துள்ளார்.

Similar News

News November 20, 2025

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News November 20, 2025

BREAKING: 9 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. TN-ல் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சென்னை, குமரி, நெல்லை, திருவள்ளூரில் மிதமான மழையும் பெய்யும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News November 20, 2025

வரலாறு படைக்கும் பிஹார் CM நிதிஷ்குமார்

image

NDA கூட்டணியால் பிஹார் CM-மாக தேர்வாகியுள்ள நிதிஷ்குமார், இன்று காலை 11.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார். இதன்மூலம் 2005 முதல் (2014 மே – 2015 பிப்., தவிர) இன்று வரை பிஹார் CM-ஆக நிதிஷ் தொடர்கிறார். 35 ஆண்டுகளாக போட்டியிடாமலேயே CM பதவியில் தொடர்ந்த இவர், மீண்டும் 10-வது முறையாக பொறுப்பேற்று சாதனை படைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில், PM மோடி மற்றும் பாஜக ஆளும் மாநில CM-கள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!