News March 29, 2024
அதிருப்தியில் பாதியிலேயே கிளம்பிய ராதிகா

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சில இடங்களில் மட்டுமே பேசிவிட்டு, பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பாஜகவினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. அதேபோல், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டமும் சேரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர் பாதிலேயே கிளம்பிய நிலையில், சரத்குமார் மட்டும் பெருங்குடி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
Similar News
News December 28, 2025
வெறும் வயிற்றில் தினமும் இதை குடிக்கலாமா?

கற்றாழை சாறு ஒரு ‘நேச்சுரல் டீடாக்ஸ்’ பானம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், *ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் *மலச்சிக்கல், அசிடிட்டி, வயிறு உப்பசத்திற்கு தீர்வாகும் *எடையை குறைக்க உதவும் *சருமத்தை பொலிவாக்கும் *உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. எனினும், ஒருநாளைக்கு 30-50 மி.லி. மட்டுமே பருக வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். கர்ப்பிணிகள் டாக்டர்கள் ஆலோசனையின் படியே அருந்த வேண்டும்.
News December 28, 2025
ஆட்சியில் பங்கு கேட்டுள்ளோம்: செல்வப்பெருந்தகை

சமீபமாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் அதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இது குறித்து பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில், அவர் இந்த கோரிக்கையை CM ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தமிழக காங்கிரஸும் அதையே விரும்புவதாக அவர் கூறினார்.
News December 28, 2025
அதிமுகவில் இணைகிறாரா கே.சி.பழனிசாமி?

கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணையலாம் என பேசப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அதிமுக தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற அவர், பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், CM ஆக வேண்டும் என EPS-க்கு எண்ணம் இருந்தால் தற்போது தனித்தனியாக பிரிந்திருப்பவர்களை இணைத்து அதிமுக மேடையில் நிறுத்தலாம் எனவும் தனது மனதில் இருப்பதை போட்டுடைத்தார்.


