News May 12, 2024
இந்திய கிரிக்கெட் அணியில் இனவெறி?

இந்திய அணியில் இனவெறி நிலவியதாக முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த அவர், 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பைகளை கைப்பற்றிய இந்திய அணியில் விளையாடியிருந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட் அணியில் தாம் விளையாடிய காலம் முதல், தென்னிந்திய மக்களுக்கு எதிரான மனநிலையை கண்டதாகவும், “மதராசி” என்று தாம் அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News November 19, 2025
32,438 காலியிடங்கள்… RRB தேர்வு ஒத்திவைப்பு

நவ.17 முதல் டிசம்பர் கடைசி வாரம் வரை நடக்கவிருந்த குரூப்-D பணிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக RRB அறிவித்துள்ளது. மேற்கண்ட தேர்வு வரும் 27-ம் தேதி முதல் ஜனவரி 16, 2026 வரை நடைபெறும். நாளை முதல் இதற்கான இடம், தேதி விவரங்களை இணையத்தில் அறியலாம். தேர்வுக்கு 4 நாள்கள் முன்பாக e-call letters-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம். மொத்தம் 32,438 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன.
News November 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 19, 2025
மீண்டும் தலைமை பொறுப்பில் ஜெஃப் பெசோஸ்

Project Prometheus என்ற புதிய AI நிறுவனத்தின் இணை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் பொறுப்பேற்றுள்ளார். 6.2 பில்லியன் டாலர் நிதியில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், ரோபாட்டிக்ஸ் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தனது Blue origin நிறுவனத்தின் விண்வெளி ஆய்வுகளுக்கு உதவும் என்று ஜெஃப் பெசோஸ் நம்புவதாகவும் கூறப்படுகிறது.


