News August 7, 2025
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம். *உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.
Similar News
News March 3, 2026
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

*1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். *அதை 3-ல் பெருக்குங்கள் *அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள் *கிடைக்கும் விடையை மீண்டும் 3-ல் பெருக்குங்கள் *இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும் *அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க. நீங்களும் நண்பர்கள் கிட்ட கேட்டு மாஸ் பண்ணுங்க.
News March 3, 2026
புத்தகம் சுமந்த பிஞ்சுகள்.. புதைக்குழிக்குள்..

இங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளில் பல சிரிப்புகள் புதையவுள்ளன. ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலில் பலியான மாணவிகளை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழிகள் இவை. பள்ளிக்கு சிரித்த முகத்துடன் சென்ற குழந்தைகளின் உயிரற்ற உடல்களை பார்த்து பெற்றோர்கள் <<19277394>>கதறி அழுத காட்சி<<>> நெஞ்சை உலுக்குகிறது. அதிகார வெறிக்காக நடக்கும் போரில் ஏன் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளும், அப்பாவி மக்களும் பலியாக வேண்டும்?
News March 3, 2026
சங்கீதாவுக்கு இதை செய்யவில்லை.. விஜய் REWIND

விஜய் – சங்கீதா விவகாரம் பேசுபொருளான நிலையில், NDTV-க்கு அளித்த பழைய பேட்டியில் விஜய் பேசியது வைரலாகிறது. அதில், திருமணத்திற்கு முன்பு தனக்கு நிறைய பரிசுகளை சங்கீதா கொடுப்பார். ஆனால், திருமணத்திற்கு பிறகு அவை குறையத் தொடங்கின. காரணம், நான் அவர் கொடுக்கும் பரிசுகளுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என விஜய் கூறியுள்ளார். தன்னை அதிகளவில் புரிந்துகொண்டு நடப்பவர் சங்கீதா என்றும் தெரிவித்துள்ளார்.


