News September 4, 2025

உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புடின்

image

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு வந்தால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் தெரிவித்துள்ளார். இருள் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதாக நினைப்பதாகவும், உக்ரைன் விவகாரத்தில் அமைதி எட்டப்படாவிட்டால், அதை ராணுவ ரீதியாக தீர்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுவரை ஜெலன்ஸ்கி உடனான நேரடி சந்திப்பை புடின் புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 5, 2025

அனைவரையும் கவர்ந்த தமிழ் சினிமா டீச்சர்கள்

image

ஆசிரியர்கள் தினமான இன்று (செப்.5) தங்களுக்கு பிடித்த டீச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கிஃப்ட் கொடுப்பது என அனைவரும் கொண்டாடி தீர்ப்பர். ஆனால் இந்த கொண்டாட்டங்கள் Off-Screen-ல் மட்டும் தான் இருக்க வேண்டுமா என கேட்டால் இல்லை. சினிமாக்களில் On-Screen-ல் வரும் சில ஆசிரியர்களும் நமது வாழ்வில் சொல்லத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பர். அதில் உங்களுக்கு பிடிச்ச டீச்சர் யார்? சொல்லுங்க…

News September 5, 2025

BREAKING: ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம்: சசிகலா

image

செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் எனவும், ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம், நாளை நமதே என்றும் அதிரடி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, அதிமுகவுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட காலங்களில் செங்கோட்டையன், வலிமையோடு எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 5, 2025

ஏன் ஓணம் கொண்டாடுகிறோம் தெரியுமா?

image

மஹாபலி என்ற அசுரராஜா, நீதியாலும் அன்பாலும் மக்களை ஆட்சி செய்தார். அவரது புகழால் பொறாமைப்பட்ட தேவர்கள், விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு வாமனராக விஸ்வரூபம் எடுத்து, மஹாபலியிடம் 3 அடியளவு நிலம் கேட்டார். முதல் அடியில் பூமி, 2-ம் அடியில் விண்ணையும், 3-ம் அடிக்கு தன்னையே ஒப்படைத்து தலையை மஹாபலி கொடுத்து, பாதாளத்திற்கு சென்றார். அவர் பாதாளத்தில் இருந்து பூமிக்கு வரும் நாளை ஓணமாக கொண்டாடுகின்றனர். SHARE IT.

error: Content is protected !!