News September 4, 2025
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புடின்

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு வந்தால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் தெரிவித்துள்ளார். இருள் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதாக நினைப்பதாகவும், உக்ரைன் விவகாரத்தில் அமைதி எட்டப்படாவிட்டால், அதை ராணுவ ரீதியாக தீர்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுவரை ஜெலன்ஸ்கி உடனான நேரடி சந்திப்பை புடின் புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 17, 2026
ஆதவ் அர்ஜுனா சொன்னது பொய்: ரஜினிகாந்த்

ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் தன்னை <<19363014>>பற்றி கூறிய கருத்து<<>> உண்மைக்கு மாறானது என ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பற்றிய அவதூறு கருத்தை கண்டித்த EPS, நயினார், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோருக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆதவ் அர்ஜுனாவை தவெகவில் இருந்து நீக்க விஜய்க்கு பலரும் அறிவுறுத்தியிருந்தார்.
News March 17, 2026
போர் குறித்து வதந்தி பரப்பிய 19 இந்தியர்கள் கைது

ஈரான்-இஸ்ரேல் போர் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக UAE-வில் 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து போலியான வீடியோக்கள், AI மூலம் எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்திய மதிப்பில் ₹23 லட்சம் அபராதம், ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News March 17, 2026
யாருக்கும் பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: தமிழிசை

CBI மூலம் NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு, தாங்கள் கூட்டணிக்காக யாருக்கும் அழுத்தமோ நெருக்கடியோ கொடுக்கவில்லை என தமிழிசை கூறியுள்ளார். தற்போதுள்ள தங்களின் கூட்டணி பலமாக உள்ளது என்ற அவர், வேறு யாரும் கூட்டணிக்கு வருவார்களா என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.


