News February 22, 2025
கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை

மாமல்லபுரத்தில் வரும் 26ஆம் தேதி TVK பொதுக்குழு கூட்டம் நடைபெறும் விடுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். விஜய்யின் பாதுகாப்பு குறித்து, பவுன்சர்களிடமும், கட்சி நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எப்போது அந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News February 22, 2025
டான்செட் தேர்வு: பிப்.26 வரை அவகாசம் நீட்டிப்பு

M.E., M.TECH., M.PLAN, M.ARCH., படிப்புகளில் சேருவதற்கான CEETA-PG மற்றும் MBA, MCA படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. <
News February 22, 2025
ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு சொத்தா!

2025 நிலவரப்படி, ஷுப்மன் கில்லின் நிகர சொத்து மதிப்பு ₹32 கோடிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. BCCI ஒப்பந்தம் மூலம் அவர் ஆண்டுக்கு ₹5 கோடி சம்பளம் பெறுகிறார். IPLல் GT அணிக்காக ₹16.50 கோடிக்கு கையெழுத்திட்டுள்ளார். ஜில்லட், டாட்டா கேபிடல், மை11சர்க்கிள் நிறுவனங்களின் விளம்பர காண்ட்ராக்ட் வருமானமும் வருகிறது. பென்ஸ், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட சொகுசு கார்களுடன், பஞ்சாப்பில் அதி நவீன வீட்டையும் வைத்துள்ளார்.
News February 22, 2025
2000 ஆண்டுகளாக போராட்டம்: சேகர்பாபு

சிதம்பரத்தில் கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார். இறைவன் முன், அனைவரும் சமம். இதற்கான சட்டப் போராட்டம், 2,000 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. தரிசனத்திற்கு எந்த வழியாக பக்தர்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.