News March 17, 2024
புஷ்பா படப்பிடிப்பில் அசெளகரியமாக இருந்தது

புஷ்பா படத்தின் “ஊ சொல்றியா மாமா” பாடல் படப்பிடிப்பில் அசெளகரியத்தை உணர்ந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பேமிலி மேன் 2 சீரிஸில் நடித்தபோது இருந்த அசெளகரியத்தை, ‘ஊ சொல்றியா’ பாடல் படப்பிடிப்பிலும் உணர்ந்தேன். நடிகராக என்ன செய்யலாம் என்பதை ஆராயவே, அதில் நடிக்க முடிவெடுத்தேன். எப்போதும் எனது பாலினம் மீது அசெளகரியத்தையே உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 6, 2025
புயல் மீண்டும் உருவாகிறது.. கனமழை பொளந்து கட்டும்

டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. இந்நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், டிச.15-ம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 6, 2025
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ONGC தளவாடங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருவாரூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
News December 6, 2025
கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது: கோவி.செழியன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்ன நெறிமுறைகள் இருந்ததோ, அதை தான் திமுக அரசும், CM ஸ்டாலினும் செயல்படுத்தியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக உருவாக்க நினைத்த தீயை, CM ஸ்டாலின் அணைத்துள்ளதாக அவர் கூறினார். கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


