News March 24, 2025

சுத்திகரிப்பு நீர்: அமைச்சர் நேரு விளக்கம்

image

சிங்கப்பூரில் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் மக்கள் வேண்டாம் என்கின்றனர் என சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு விளக்கமளித்துள்ளார். கழிவுநீரை சுத்திகரித்தால் 100 லிட்டரில் 94 லிட்டர் நல்ல நீராக கிடைக்கும். ஆனால், நம் மக்கள் அதை வேண்டாம் என்கின்றனர். எனவே, அதை ஆற்றில் விடுவதா? விவசாயத்திற்கு வழங்குவதா என மக்களிடம் கருத்து கேட்டப் பின் முடிவெடுப்போம் என்றார்.

Similar News

News January 6, 2026

போப் மறைவால் ரோம் படைத்த சாதனை!

image

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஆண்டில் சுமார் 3.35 கோடி சுற்றுலா பயணிகள் ரோமுக்கு வந்துள்ளதாக இத்தாலிய அரசு தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு மற்றும் புதிய போப் லியோவின் பதவியேற்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் அமைதி, மன்னிப்புக்கான காலமாக 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புனித ஆண்டில் அங்குள்ள புனித வாசல்களில் நுழையவும் அதிக பயணிகள் ரோமுக்கு சென்றுள்ளனர்.

News January 6, 2026

தீபத்தூண் வழக்கில் TN அரசு மேல்முறையீடு செய்யும்: ரகுபதி

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டு காலத்தில் அது தீபத்தூண் என்பதற்கோ, அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை என்றவர், ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் தீபமேற்ற கோர்ட் அனுமதித்தது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்

News January 6, 2026

கரூர் வழக்கில் விஜய்க்கு சம்மன் அனுப்பியது CBI

image

கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கின் CBI விசாரணை வளையத்திற்குள் விஜய் சிக்கியுள்ளார். கடந்த வாரம் டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், வரும் 12-ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் தவெக தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!