News May 16, 2024
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
குமரி ரயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்

குமரி ரயில் நிலையத்திற்கு இன்று (டிச.10) வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் இரண்டு பைகள் கேட்பாடற்று கிடந்தன. அந்த பைகளை ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது, அவற்றில் 18 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
News December 10, 2025
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் high BP ஏற்படும் ஆபத்து அதிகமாம்.


