News May 16, 2024
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
குமரி: பன்றி பண்ணை உரிமையாளர் மீது தாக்குதல்

வாறுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (32). இவர் பன்றி பண்ணை வைத்து உள்ளார். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கூறி நட்டாலம் செறுவறவிளையை சேர்ந்த சஜயன்(41) (ம) அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் (42) ஆகியோர் பன்றி பண்ணைக்குள் நுழைந்து அஜின் மற்றும் அவரது தம்பி ஜெபின் ஆகியோரை தாக்கியுள்ளனர். இது குறித்து அஜின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
ரஜினிக்கு பிறந்தநாள்: கமல், EPS வாழ்த்து!

75 ஆண்டுகால தனிச்சிறப்பான வாழ்வும், 50 ஆண்டுகால லெஜண்டரி சினிமா கரீயரும் கொண்ட நண்பரே, ஹேப்பி பர்த்டே என கமல் ரஜினியை வாழ்த்தியுள்ளார். அதேபோல, அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என EPS வாழ்த்தியுள்ளார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 12, 2025
BREAKING: செங்கோட்டையன் உறுதி செய்தார்

ஈரோடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் வரும் 18-ம் தேதி விஜய்யின் பரப்புரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பரப்புரை நடைபெறவுள்ள இடம் <<18537715>>HRCE-ன் கீழ் உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது<<>> என கலெக்டர், SP-க்கு அத்துறையின் அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


