News May 16, 2024

2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 10, 2026

பொங்கல் பண்டிகை.. ஒரு கிலோ ₹10,000

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்தவகையில், மல்லிப்பூவின் விலை கிலோவுக்கு ₹10,000 வரை அதிகரித்து விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிப்பூ ₹8,000 வரையிலும், மதுரையில் ₹8,000 – ₹12,000 வரையிலும் விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் மல்லிப்பூ விலை என்ன?

News January 10, 2026

குடியரசு தின விழாவுக்காக 1,275 கிலோ போன்லெஸ் சிக்கன்

image

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்புக்காக முப்படைகளும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் தயாராகி வருகின்றன. அதனுடன் 1,275 கிலோவுக்கும் அதிகமான போன்லெஸ் சிக்கனும் தயாராகிறது. ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். விமான சாகசத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பருந்துகளுக்கான உணவாக இந்த சிக்கனை வனத்துறை, IAF உடன் இணைந்து விருந்தளிக்கவுள்ளது. இது எப்படி இருக்கு?

News January 10, 2026

ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த காங்., MP

image

தேர்தல் காலத்தில் ED, CBI, IT போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என EPS கூறியிருப்பது திவால்தனத்தின் ஒப்புதலா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு காலத்தில் அதிமுக தனித்த அடையாளத்தை கொண்டிருந்ததாக கூறிய அவர், இன்று அது அமித்ஷாவின் அதிமுக இயந்திரத்தின் துணை அலுவலகமாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!