News May 16, 2024
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
60 KM., வேகத்துக்கு மேல் பஸ் சென்றால் நடவடிக்கை: KKSSR

<<18374035>>தென்காசியில்<<>> விபத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்களின் பர்மிட்டை கேன்சல் செய்திருப்பதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். தனியார் பஸ்கள் இனி 60 கி.மீ., வேகத்துக்கு மேல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான கருவி பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனிக்க RTO-க்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 25, 2025
டிச.15 வரை கெடு.. OPS-ன் பிளான் இதுவா?

தேர்தல் பற்றி டிச.15-ல் இறுதி முடிவு எடுக்கப்படும், அதற்குள் திருந்துங்கள் என EPS-க்கு OPS கெடு விதித்துள்ளார். ஆனால், உண்மையில் இது EPS-க்கான கெடு அல்ல என கூறப்படுகிறது. அதாவது, ஒத்த கருத்துடையவர்களை இணைத்து NDA கூட்டணியில் மீண்டும் சேர OPS திட்டமிடுகிறாராம். டிடிவியிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதனால்தான் டிச.15-ல் முடிவெடுக்கப்படும் என OPS கூறுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 25, 2025
ஆரோக்கியமா இருக்க இந்த ஒரு சூப் குடிங்க போதும்!

குளிர்காலங்களில் சூடாக குடிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த உணவு சூப். அதிலும் பூசணிக்காய் சூப்பில் வைட்டமின் A, C, நார்ச்சத்து என பல சத்துக்கள் உள்ளதால், பல்வேறு நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *செரிமானத்தை மேம்படுத்தும் *இதய ஆரோக்கியத்திற்கு நல்லது *கண் பார்வையை அதிகரிக்கிறது *தோலுக்கு நல்லது *எடையை குறைக்க உதவுகிறது *உடலின் நீர்ச்சத்துக்கு உதவுகிறது.


