News May 16, 2024
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
இளைஞர்கள் ஓட்டு தவெகவுக்கு செல்லுமா? கனிமொழி

மகளிர், சிறுபான்மையினர், இளைஞர்களின் வாக்குகள் தவெகவுக்கு செல்லுமா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிந்த பிறகு அதற்கான பதில் நிச்சயம் உங்களுக்கு தெரியும் என MP கனிமொழி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பலர் பொய் பிரச்சாரம் செய்வார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News December 23, 2025
ஜன.1 முதல் மிகப்பெரிய மாற்றம்.. முடங்கிவிடும்

ஜனவரி 1-ம் தேதி ✦PAN – ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வங்கி சேவைகள் & அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் ✦Credit Score-கள் வாரம் ஒருமுறை அப்டேட் செய்யப்படும். முன்னர், 15 நாள்களுக்கு ஒருமுறை Credit Score-கள் அப்டேட் செய்யப்பட்டன ✦SBI, PNB, HDFC போன்ற வங்கிகளில் FD-க்கான interest rate மாற்றியமைக்கப்படலாம் ✦8-வது ஊதியக் குழு அமலுக்கு வரும் என்பதால், சம்பளம் 35% வரை உயரலாம்.
News December 23, 2025
பியூஷ் கோயலை சந்திக்கிறாரா OPS?

ஒருபக்கம் அதிமுக-பாஜக கூட்டணியின் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், OPS தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்க OPS திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கூட்டணி தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.


