News May 16, 2024
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
வரலாற்றில் முதல்முறை.. விலை தாறுமாறாக மாறியது!

தங்கம், வெள்ளியை போல் முட்டை விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 40 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6.15 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ₹6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்க வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் முட்டை விலை எவ்வளவு?
News December 12, 2025
தமிழ்நாட்டில் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

செதுக்கப்பட்ட பழங்கால கோயில்கள், அழகிய கடற்கரை, மேகங்களுக்குள் மறைந்திருக்கும் சிகரங்கள் என தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடமும் ஒரு தனித்துவ அழகை கொண்டது. அந்த வகையில், நாம் வாழ்நாளில் நிச்சயம் பார்க்கவேண்டிய சில இடங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News December 12, 2025
தமிழ் நடிகை பலாத்காரம்.. பரபரப்பு தீர்ப்பு

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நடிகை பாலியல் வழக்கில், 6 பேர் குற்றவாளிகள் என கடந்த சில நாள்களுக்கு முன்பு எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், இதில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் <<18502283>>திலீப்<<>> உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


