News April 1, 2025
பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

இன்றைய IPL போட்டியில், பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ அணி. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க வீரர் மார்ஷ் 0 ரன்களிலும் கேப்டன் பண்ட் 2 ரன்களிலும் வெளியேறினர். இறுதியாக, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Similar News
News March 26, 2026
PNG இணைப்புக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு

PNG இணைப்பை பெற விருப்பமுள்ள வணிக & தொழில்துறையினர் CGD நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என TN அரசு தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Torrent Gas: 1800-2125-6789), காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (AG&P/Think Gas: 1800-202-2999), திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Adani Total Gas: 079-47545252) தொடர்பு கொள்ளவும். இதர மாவட்டங்களுக்கு இந்த <
News March 26, 2026
தாமரைக்கு வாக்களித்து பாவம் செய்யாதீர்கள்: கருணாஸ்

தமிழக வரலாற்றில் பாஜகவுக்கு இவ்வளவு சீட் கொடுத்ததாக தனக்கு ஞாபகமில்லை என கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவிடம் சீட் வாங்கிய பாஜக, சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் நிற்க வைக்கிறது; தேர்தலுக்கு பிறகு அவர்களின் வாக்கு சதவீதத்தையும் தங்கள் கணக்கில் அது சேர்த்துவிடும் என விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து, பாவகாரியம் செய்து விடாதீர்கள் எனவும் எச்சரித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
வாக்காளர் பட்டியல்.. புதிதாக சேர பொதுமக்கள் ஆர்வம்

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம் என EC தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இதுவரை 3.20 லட்சம் பேர் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.70 கோடி ஆக உயர வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>


