News February 18, 2025
போக்சோ வழக்கில் தண்டனை பெற்றால் சான்றிதழ் ரத்து

போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என TN CS முருகானந்தம் அறிவித்துள்ளார். மேலும் இனிமேல் ஆசிரியர்கள் நியமனத்தின்போது, போலீஸ் வெரிஃபிகேஷன் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சமீப நாட்களாக TN பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ள சூழலில், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Similar News
News December 4, 2025
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: மீளுமா இங்கிலாந்து?

2-வது ஆஷஸ் டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த ENG, BAZBALL அணுகுமுறையை கைவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிங்க் பால் பயன்படுத்தி நடக்கும் இந்த பகல்-இரவு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் ஆஸி., 14 பிங்க் பால் டெஸ்ட் விளையாடி ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. புதிய யுக்தியுடன் ENG களமிறங்கினால், அது ஆஸி.,க்கு சவலாக அமையக்கூடும்.
News December 4, 2025
குளு குளு தென்றலாக பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாவில், குளிர் காலத்தை ரசித்து மகிழும் புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில்லென்ற மூக்கு, குளிர்கால ஃபேஷன், ஹாட் சாக்லேட், சூரியனின் அரவணைப்பும் என்று அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குளு குளு தென்றலாக குளிர்காலத்தை என்ஜாய் செய்யும் பூஜாவின் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 4, 2025
அணு பேரழிவு நடந்த இடத்தில் செழித்து வளரும் உயிர்!

உலகின் மிகமோசமான அணு உலை பேரழிவு நடந்த பகுதியாக உக்ரைனின் செர்னோபில் உள்ளது. இங்கு நிலவும் அணு கதிர்வீச்சால் இன்று வரை மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக கருதப்படும் நிலையில், கருப்பு பூஞ்சை எனும் ஒரே ஒரு உயிர் மட்டும் செழித்து வளர்ந்து வருகிறது. பிற தாவரங்கள் எப்படி சூரிய ஒளியை வளர்ச்சிக்கான ஆற்றலாக மாற்றுகிறதோ, அதேபோல், இந்த பூஞ்சைகள் கதிர்வீச்சை ஆற்றலாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


