News May 13, 2024
விருப்பத்துடன் உறவு வைத்துக் கொண்டாலும் தண்டனை

சிறுமியுடன் விருப்பத்துடன் உறவு வைத்துக் கொண்டாலும் அது குற்றம்தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சிக்கிய வாலிபர் சதீஷ் குமாருக்கு (25) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. 15 வயது சிறுமியும், சதீஷ்குமாரும் காதலித்து வந்ததாகவும் விருப்பத்தின் பேரிலேயே உறவு வைத்துக் கொண்டதாகவும் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
Similar News
News August 6, 2025
தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.
News August 6, 2025
மழையில் ஃபோன் நனையாமல் காக்க…

மழையில் உங்கள் ஃபோன் நனையாமல் காக்க, எப்போதும் வாட்டர்புரூப் பவுச் வைத்திருக்கவும் *ஜிப்லாக் பவுச் மற்றும் சிலிகா ஜெல் பாக்கெட்களும் உங்கள் போன் ஈரமாகாமல் காக்கும் *அழைப்புகளை ஏற்க புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தலாம் *மழையில் போனில் ஈரம் புகுந்துவிட்டால், சார்ஜ் போடுவதை கட்டாயம் தவிர்க்கவும் *அரிசிக்குள் (அ) சிலிகா ஜெல் பாக்கெட்கள் கொண்ட ஜிப்லாக் கவரில் ஈரம் உறிஞ்சப்படும் வரை போட்டு வைக்கலாம்.
News August 6, 2025
மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமா, முத்தரசன், சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.