News April 23, 2025
பாக்.கை தண்டியுங்கள்.. நாடு முழுவதும் ஒரே குரல்

பகல்ஹாமில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் தங்கள் இடையேயான கருத்து வேறுபாட்டை மறந்து பாகிஸ்தானை தண்டிக்க குரல் எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் இதையே வலியுறுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் பல இனம், மொழி மக்கள் வாழ்ந்தாலும் தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவே இந்தியா!
Similar News
News December 4, 2025
டிசம்பர் 4: வரலாற்றில் இன்று

*1898–இயற்பியலாளர் கே.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் *1910–முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பிறந்தநாள் *1953-தமிழறிஞர் அ.வேங்கடாசலம் பிள்ளை நினைவு நாள் *1971-இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கியது *1974–நடிகை அனுபமா குமார் பிறந்தநாள் *1984–மன்னாரில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 150 தமிழ் மக்கள் படுகொலை
News December 4, 2025
T20 WC: இந்திய அணியின் ஜெர்ஸி அறிமுகம்

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் அணியவுள்ள புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI இடைவேளையின் போது ரோஹித் சர்மாவும், திலக் வர்மாவும் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், மைதானத்தில் பிரமாண்ட ஜெர்ஸியும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய அணியின் புது ஜெர்ஸி எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க
News December 4, 2025
ஆபாச புகைப்படம்.. கொந்தளித்த ரஷ்மிகா

AI பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என ரஷ்மிகா மந்தனா வலியுறுத்தியுள்ளார். AI-ல் உருவாக்கப்பட்ட ரஷ்மிகாவின் ஆபாச போட்டோ SM-ல் காட்டுத் தீ போல் பரவியது. இதுகுறித்து X-ல் அவர், AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி, ஆனால் அதை ஆபாசமான விஷயங்களை உருவாக்கவும், பெண்களை குறிவைத்து தாக்கவும் சிலர் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.


