News April 23, 2025
பாக்.கை தண்டியுங்கள்.. நாடு முழுவதும் ஒரே குரல்

பகல்ஹாமில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் தங்கள் இடையேயான கருத்து வேறுபாட்டை மறந்து பாகிஸ்தானை தண்டிக்க குரல் எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் இதையே வலியுறுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் பல இனம், மொழி மக்கள் வாழ்ந்தாலும் தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவே இந்தியா!
Similar News
News November 23, 2025
கருவுறாமை பிரச்னையா? இதோ அற்புத மூலிகை!

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.
News November 23, 2025
விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 23, 2025
விலை கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

TN-ல் தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ₹50 – ₹60-க்கும், சில்லறை விற்பனையில் ₹80 – ₹100 வரை விற்பனையாகிறது. அதேபோல், சாம்பார் வெங்காயம் கிலோ ₹70 – ₹80, கத்தரிக்காய் ₹50 – ₹70-க்கு விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ₹58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


