News December 6, 2024

புல்வாமா தீவிரவாதியை தூக்க வேண்டும்: இந்தியா

image

புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் மீது பாக். அரசு நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. அசார் தங்கள் நாட்டில் இல்லை என பாக். கூறிவரும் நிலையில், சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அசார் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், தீவிரவாத நடவடிக்கைகளை பாக். ஆதரிப்பதாக அர்த்தம் என MEA செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

BREAKING: திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி!

image

Ex அமைச்சர் பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் சாமிநாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திமுகவில் து.பொ., எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

News November 4, 2025

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

image

ரஷ்யாவின் கிழக்கில் அமைந்துள்ள Kamchatka பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த சேத விவரமும் பதிவாகவில்லை. இப்பகுதியில் உள்ள கண்டத் தட்டுகள் (Tectonic Plates) நகர்ந்து வருவதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

News November 4, 2025

மாதம்பட்டிக்கு செக் வைத்த மகளிர் ஆணையம்!

image

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில், சென்னை காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. பிறப்பு சான்றிதழில், த/பெயர் ரங்கராஜ் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

error: Content is protected !!