News April 17, 2024

பருப்பு விலை மூட்டைக்கு ₹700 உயர்ந்தது

image

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு, எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில், உளுந்து, பாசிப் பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். முழு உளுந்து 100 கி. மூட்டைக்கு ₹700, சாதா உளுந்து ₹200, தொலி உளுந்து ₹100 மற்றும் பாசிப் பருப்பு ₹150 வரை விலை உயர்ந்துள்ளன.

Similar News

News April 6, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

காதல்.. நடிகை த்ரிஷாவின் புதிய POST

image

விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷா காதலை குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில், ‘எல்லாம் காதல் இல்லை. ஆனால், காதல் இல்லாவிடில் எதற்கும் அர்த்தம் இல்லை’ என்ற போட்டோவை ஷேர் செய்து, அதற்கு ‘உண்மை’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார். எந்த விஷயத்தை மேற்கோள் காட்டி த்ரிஷா பதிவிட்டுள்ளார் என்பதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. என்னவா இருக்கும்?

News April 5, 2026

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி: EPS

image

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணியின் ஆட்சி இருந்தால்தான் புதுச்சேரி மக்களுக்கு நன்மை கிடைக்கும் என EPS தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், இரு இடங்களிலும் வெவ்வேறு கட்சிகள் இருந்தால் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி கிடைக்காது என கூறியுள்ளார். NDA ஆட்சிக்கு வந்தால் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிதி உயர்த்தி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

error: Content is protected !!