News March 17, 2024

புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல் 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.

Similar News

News January 19, 2026

புதுகை: இரு தரப்பினர் இடையே மோதல் – மக்கள் போராட்டம்

image

கறம்பகுடி அருகே மஞ்சுவிடுதி கிராமத்தில் நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்ற போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுள்ளது. இதில் வெளியூரை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட பகுதி மக்கள் பகுதியில் புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், நேற்று அம்மக்கள் தங்கள் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News January 19, 2026

புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை(ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாத்தூர், இண்டஸ்ட்ரியல் பகுதி, கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரில எஸ்டேட், , தேவளி, ஆவூர், ஆம்பூர் பட்டி, பிடாம்பட்டி, திருமலை சமுத்திரம், வங்காரம் பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!

News January 19, 2026

புதுகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.18) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.19) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!