News March 17, 2024
புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.
Similar News
News December 23, 2025
புதுகையில் ஒரே நாளில் பெறப்பட்ட 619 மனுக்கள்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட 619 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட 619 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News December 23, 2025
புதுகை: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

புதுகை மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI
News December 23, 2025
புதுகை அருகே டிராக்டர் மோதி பரிதாப பலி!

மாத்தூரை சேர்ந்த பரணி 21, கூலித் தொழிலாளியான இவர், ஆவூரில் இருந்து மாத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிங்கத்தாகுறிச்சி அருகே சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராமல் பைக் மோதியது. இதில் காயமடைந்த பரணி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


