News March 17, 2024
புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.
Similar News
News December 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, அரிமளம், தல்லாம்பட்டி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.29) பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள உள்ளனர். இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட மன் நிலைங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து இடங்களிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 28, 2025
புதுக்கோட்டை: திருமண தடையை நீக்கும் கோயில்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News December 28, 2025
புதுக்கோட்டை மாநகர DSP நியமனம்

புதுக்கோட்டை மாநகர காவல் துணை கண்காணிப்பாளராக (DSP) பிருந்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறுகையில், மாநகர உட்கோட்டத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை 97899 18079 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.


