News July 9, 2025
புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
Similar News
News September 11, 2025
உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு வருமா? இதை செக் பண்ணுங்க

உங்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளதை பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுத்தும்: 1) அடிக்கடி தாகம் & தண்ணீர் குடித்தல் 2) நன்றாக தூங்கியும் எப்போதும் சோர்வாக உணர்வது 3) சிறு சிராப்புகள், காயங்கள் கூட மெதுவாக ஆறும் நிலை 4) பார்வை மங்குதல் (அ) மாற்றம் 5) பாதம் மரத்துப் போதல், அதனால் கூச்ச உணர்வு 6) திடீரென உடல்பருமன் அதிகரிப்பது (அ) எந்த மாற்றமும் செய்யாமலே உடல் எடை குறைதல். SHARE
News September 11, 2025
சற்றுமுன்: அடுத்த 1 மணி நேரத்திற்கு அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
TET தேர்வு: மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு

TET தேர்வு கட்டாயம் என்ற SC-யின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் TET-ல் தேர்ச்சி பெற வேண்டும்; அப்படி இல்லையென்றால் கட்டாய ஓய்வு வழங்கலாம் என்று செப்.1-ம் தேதி SC தீர்ப்பளித்தது. இதனால், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அரசு மேல்முறையீடு செய்கிறது.