News March 17, 2024
திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று(மார்ச்.17) காலை அய்யனூர் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் மண் குவியலை கொட்டி பாதையை ஆக்கிரமித்ததாக கூறி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 18, 2025
திருப்பத்தூர்: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 18, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் உங்கள் வாகனங்களை பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்படும் போது, அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
News August 18, 2025
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அறிவிப்பு! 19.08.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்றம்பள்ளி ஒன்றியம் பந்தாரப்பள்ளி ஊராட்சி, கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் ஊராட்சி, ஆம்பூர் நகராட்சி 14 வார்டு ஆலங்காயம் ஒன்றியம் வலையாம்பட்டு ஊராட்சி, ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி திருப்பத்தூர் ஒன்றியம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் முகாம் நடைபெற உள்ளது.