News February 28, 2025
மார்ச் மாதத்தில் பொது விடுமுறை

மார்ச் மாதத்தில் 2 அரசு பொதுவிடுமுறைகள் வருகிறது. மார்ச் 30-ல் தெலுங்கு வருடப்பிறப்பு ஞாயிறன்று வருவதால், மார்ச் 31-ல் வரும் ரம்ஜான் மட்டுமே கூடுதல் லீவு கிடைக்கும். தவிர, அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4 அன்று குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ல் ஆண்டு கணக்குமுடிவு நாள் என்பதால், வங்கிகளுக்கு வேலைநாளாக இருக்கும்.
Similar News
News February 28, 2025
‘Time to go’: ஷாக் கொடுத்த அமிதாப்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த பிப்.7 ஆம் தேதி தனது X தள பதிவில், ‘time to go’ எனப் பதிவிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறார் என பேசினர். இது குறித்து கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் ரசிகர் அமிதாபிடம் கேட்க, அதற்கு அவர் ஜாலியாக பதிலளித்துள்ளார். ‘ஓ பிரதர், நான் வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் இது’ என வேடிக்கையாக பதிலளித்தார்.
News February 28, 2025
ஆம்னி பஸ்ஸில் கிடந்த ஆணுறைகள், உள்ளாடைகள்!

புனேவில் உள்ள ஸ்வார்கேட் பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் ரேப் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள், அந்த பஸ் ஸ்டாண்டில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் ஆணுறைகள், உள்ளாடைகள், மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கும், சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதற்கும் இதுவே சாட்சி என சிவசேனா (UBT) கடுமையாக விமர்சித்துள்ளது.
News February 28, 2025
கொடூரனை போலீஸ் பிடித்தது எப்படி?

புனே பஸ்ஸில் இளம் பெண்ணை <<15604209>>ரேப்<<>> செய்த கொடூரனை 75 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் பிடித்துள்ளனர். இதற்காக போலீஸ் 13 படைகளை அமைத்தது. ட்ரோன்கள், மோப்ப நாய் உதவியுடன் புனே மாவட்டம் முழுவதும் ஜல்லடை போட்டு தேடினர். இதில் அவனை பிடிக்க மிக முக்கிய துப்பாக இருந்தது அவன் கழட்டி வீசிச் சென்ற சட்டை தான். அதில் இருந்த சென்ட் வாசனை மூலம் மோப்ப நாய் பின்தொடர்ந்து சென்று பிடிக்க உதவி இருக்கிறது.