News December 5, 2024
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், ப்ரோபா 3 செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
Similar News
News December 6, 2025
புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
News December 6, 2025
திருவாரூர்: மழைக்கு இடிந்த வீடு-எம்எல்ஏ நேரில் ஆய்வு

முத்துப்பேட்டை, கோவிலூரைச் சேர்ந்தவர் பூமா(35). இவரின் வீடு கனமழை காரணமாக மழைநீர் ஊறி இருந்த நிலையில், வீட்டின் சுவர்கள் திடீரென்று இடிந்து விழுந்தன. இந்த நிலையில் இடிந்து விழுந்த வீட்டை எம்எல்ஏ மாரிமுத்து நேரில் பார்வையிட்டு வீட்டை இழந்த பூமாவுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது சிபிஐ ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, ரவி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
உணவு விஷயத்தில் இந்த தவறு வேண்டாம்.. ஆபத்து!

நார்ச்சத்து, புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இதற்கு நீங்கள் சாப்பிடும் முறை காரணமாக இருக்கலாம். உணவை வேக வேகமாக மென்று விழுங்காதீங்க. இப்படி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராது. அத்துடன் சுகர், இதய பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால் எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, உணவை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். SHARE.


