News December 5, 2024
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், ப்ரோபா 3 செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
Similar News
News December 4, 2025
இந்தியா இதை செய்தாக வேண்டும்: ரஷ்ய MLA

S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க, ரஷ்ய அதிபர் புடினிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பாட்னாவில் பிறந்த ரஷ்ய MLA-வான அபே சிங் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற அமைப்பு சீனாவிடம் கூட இல்லை எனவும், வேறு நாடுகளுக்கு விற்காமல் ரஷ்யா மட்டுமே பயன்படுத்தும் இந்த அமைப்பை இந்தியா பெற்றால், மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் குருஸ்க் பகுதி MLA-ஆக அபே சிங் உள்ளார்.
News December 4, 2025
RO-KO விவகாரம்.. கம்பீர், அகர்கரை சாடிய ஹர்பஜன்

RO-KO மற்றும் கம்பீர், அகர்கர் இடையே உறவு மோசமாகி வரும் நிலையில், ஹர்பஜன் சிங் கூறிய கருத்து பேசுபொருளாகியுள்ளது. தங்களது கிரிக்கெட் கரியரில் போதிய சாதனைகளை படைக்காத தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், பல சாதனைகளை படைத்துள்ள RO-KOவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், தான் உள்பட கடந்த காலங்களில் பல வீரர்களும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
புயல் அலர்ட் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர், கோவை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கை, சேலம், நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையிலும் மழை பெய்து வருகிறது.


